×

திருக்கோவிலூர் பகுதியில் பயங்கர வெடி சத்தம்: மக்கள் அச்சம்

திருக்கோவிலூர்: கள்ளக்குறிச்சி மாவட்டம், திருக்கோவிலூர் அடுத்த மாடாம்பூண்டி, பொன்னியந்தல், லா. கூடலூர், பாடியந்தல் உள்ளிட்ட பத்துக்கும் மேற்பட்ட கிராமங்களில் நேற்று பகல் 12 மணியளவில் பயங்கர வெடி சத்தம் விண்ணை பிளக்கும் அளவுக்கு கேட்டதாக தெரிகிறது.

இந்த வெடி சத்தம் திருக்கோவிலூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதியில் உள்ள சுமார் 30 கிலோ மீட்டர் அளவுக்கு உணரப்பட்டது. இதனால் மக்கள் அதிர்ச்சியடைந்தனர். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

The post திருக்கோவிலூர் பகுதியில் பயங்கர வெடி சத்தம்: மக்கள் அச்சம் appeared first on Dinakaran.

Tags : Thirukovilur ,Kallakkurichi District ,Madampoondi ,Ponneyanthal ,La ,Cuddalore ,Padianthal ,
× RELATED கிணற்றில் மூழ்கி அக்காள், தம்பி உயிரிழப்பு..!!