×

பெண் தூக்குப்போட்டு சாவு வீடியோ ஆதாரத்துடன் 2வது கணவர் கைது

பெரம்பூர்: சென்னை வியாசர்பாடி எம்கேபி. நகர் 19வது மேற்கு குறுக்கு தெரு பகுதியை சேர்ந்தவர் முத்துலட்சுமி (38). இவரது கணவர் சுரேஷ். இவர்களுக்கு கிருஷ்ணமூர்த்தி (19), ராமமூர்த்தி (16) என்ற மகன்கள் உள்ளனர். இந்த நிலையில், திருமணமான ஐந்து ஆண்டுகளில் சுரேஷை பிரிந்து முத்துலட்சுமி தனியாக வசித்துவந்துள்ளதாக தெரிகிறது. இதையடுத்து முத்துலட்சுமி 2வதாக கடந்த 2019ம் ஆண்டு சுதாகர் (36) என்பவரை 2வது திருமணம் செய்து கொண்டார். கடந்த சில நாட்களாக சுதாகருக்கும் முத்துலட்சுமிக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் கடும் மன உளைச்சலில் இருந்த முத்துலட்சுமி கடந்த 11ம் தேதி இரவு 7 மணி அளவில், தனது வீட்டில் தூக்கு மாட்டி தற்கொலை செய்துகொண்டார்.

எம்கேபி. நகர் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று முத்துலட்சுமியின் உடலை ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். இந்த நிலையில் அவரது செல்போன் சில நாட்களாக சுவிட்ச் ஆப் ஆகி இருந்தது. நேற்று முத்துலட்சுமியின் முதல் மகன் கிருஷ்ணமூர்த்தி தாயின் செல்போனை சார்ஜ் செய்து செல்போனை ஆன் செய்து பார்த்தபோது முத்துலட்சுமி இறப்பதற்கு முன்பு எனது மரணத்திற்கு காரணம் 2வது கணவர் சுதாகர்தான் என்று பேசி வீடியோ வெளியிட்டுள்ளது பதிவாகி இருந்தது. இதையடுத்து அந்த வீடியோவை எம்கேபி.நகர் காவல் நிலையத்துக்கு கொண்டுவந்து கிருஷ்ணமூர்த்தி காண்பித்து தாயின் சாவுக்கு காரணமான சுதாகர் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று தெரிவித்துள்ளார். இதன் அடிப்படையில், இன்ஸ்பெக்டர் சந்திரசேகர் தலைமையில் போலீசார், தற்கொலைக்கு தூண்டியதாக வழக்குபதிவு செய்து நேற்று சுதாகரை கைது செய்தனர். அவரிடம் நடத்தப்பட்ட விசாரணைக்கு பிறகு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

The post பெண் தூக்குப்போட்டு சாவு வீடியோ ஆதாரத்துடன் 2வது கணவர் கைது appeared first on Dinakaran.

Tags : Perampur ,Chennai ,Vyasarbadi ,MKB Muthulakshmi ,19th West Cross Street ,Nagar ,
× RELATED பெரம்பூரில் மாநகர பஸ் மோதி ஐடிஐ மாணவன் பரிதாப சாவு