×

இளம்பெண் மாயம்

திருச்சி, ஆக.15: திருச்சியில் மாயமான இளம்பெண்ணை போலீசார் தேடி வருகின்றனர். திருச்சி வடக்கு ஆண்டாள் வீதியைச் சேர்ந்தவர் மோகன் (55). இவரது மகள் கவிதா (25). இவர் கடந்த பிப்.1ம் தேதி விக்னேஷ்வரன் என்பவரை திருமணம் செய்து கொண்டார். இந்நிலையில் கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் கடந்த ஆக.4ம் தேதி ஏற்பட்ட தகராறில் கவிதா கோபித்துக்கொண்டு பெற்றோர் வீட்டுக்கு வந்துவிட்டார்.

இந்நிலையில் கடந்த 12ம் தேதி வீட்டில் இருந்து வெளியில் சென்று வருவதாக கூறி சென்றவர், இரவு வெகு நேரமாகியும் வீடு திரும்பவில்லை. பல்வேறு இடங்களில் தேடியும் அவர் கிடைக்கவில்லை. இதுகுறித்த புகாரின்பேரில் கோட்டை இன்ஸ்பெக்டர் சிவராமன் வழக்குப்பதிந்து மாயமான இளம்பெண்ணை தேடி வருகிறார்.

The post இளம்பெண் மாயம் appeared first on Dinakaran.

Tags : Trichy ,Mohan ,North Andal Veethi.… ,
× RELATED விருது தொகையில் சமூக சேவை பள்ளி மாணவியின் அரிய பணி