×

பூட்டிய வீட்டில் வெல்டர் சடலம்

ஸ்பிக்நகர், ஆக. 15: கேரள மாநிலம் பாலக்காடு பகுதியை சேர்ந்தவர் வெங்கடேஷ்(48). இவர், தூத்துக்குடி அடுத்த கோயில் பிள்ளைநகர் 3வது தெருவில் தங்கியிருந்து வெல்டிங் வேலை செய்து வந்தார். கடந்த சனிக்கிழமை மாலை வேலை முடிந்து வீட்டுக்கு வந்துள்ளார். அதன் பிறகு வீட்டை விட்டு வெளியே வரவில்லை. நேற்று வீட்டில் இருந்து துர்நாற்றம் வீசுவதாக அருகில் இருந்தவர்கள் கொடுத்த தகவலின் பேரில் தெர்மல்நகர் போலீசார் சென்று பார்த்தபோது வீட்டுக்குள் வெங்கடேஷ் இறந்து கிடந்தது தெரிய வந்தது. இதையடுத்து உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

The post பூட்டிய வீட்டில் வெல்டர் சடலம் appeared first on Dinakaran.

Tags : Spicnagar ,Venkatesh ,Palakkad region ,Kerala ,Thuthukudi ,Pillainagar ,
× RELATED மன்னார்குடி அருகே மதுபோதையில் தகராறு...