×

மேல்மலையனூரில் சோகம் மகன், பேரன் கல்லறை அருகே பெண் தூக்கிட்டு தற்கொலை

மேல்மலையனூர், ஆக. 15: விழுப்புரம் மாவட்டம் மேல்மலையனூர் தாலுகா வளத்தி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட கெங்கபுரம் கிராமத்தில் வசித்து வருபவர் சந்திரன். இவரது மனைவி முனியம்மாள். இவர்களுக்கு தமிழரசன், பாபு என்ற இரு மகன்கள் இருந்த நிலையில் கடந்த 2020ம் ஆண்டு தனது சிறிய மகன் பாபு சாலை விபத்தில் உயிரிழந்தார். இந்நிலையில் தன் பெரிய மகனுக்கு திருமணம் செய்து அவருக்கு பிறக்கும் குழந்தை தனது சிறிய மகனாக இருப்பான் என நினைத்து அதற்காக நீண்ட நாள் காத்திருந்தனர். பிறகு பெரிய மகன் தமிழரசன் அவரது மனைவி பிரியதர்ஷினிக்கு கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனையில் ஆண் குழந்தை பிறந்தது. இக்குழந்தை கடந்த நான்கு நாட்களுக்கு முன்பு உடல் சுகவீனத்தினால் இறந்ததாக கூறப்படுகிறது.

இந்நிலையில் ஏற்கனவே தனது மகன் பாபு உயரிழப்பை ஏற்றுக் கொள்ள முடியாமல் தவித்து வந்த தாய் முனியம்மாள் தனது பெரிய மகனுக்கு பிறந்த குழந்தை ஒரு மாதத்திலேயே உயிரிழந்ததால் கடந்த நான்கு நாட்களாக மன உளச்சலில் இருந்து வந்துள்ளார். இந்நிலையில், நேற்று சுடுகாட்டில் உள்ள சிறிய மகன் கல்லறை அருகாமையில் குழந்தை எரிக்கப்பட்ட இடத்தில் இருந்த வேப்ப மரத்தில் முனியம்மாள் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இச்சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து வளத்தி காவல் நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

The post மேல்மலையனூரில் சோகம் மகன், பேரன் கல்லறை அருகே பெண் தூக்கிட்டு தற்கொலை appeared first on Dinakaran.

Tags : Melmalayanur ,Kengapuram ,Valathi Police ,Station ,Villupuram district ,
× RELATED காரைக்குடி மற்றும் சுற்று வட்டார இடங்களில் மழை!