×

கோயில் குளத்தில் மூழ்கி வாலிபர் பரிதாப சாவு

ஊத்துக்கோட்டை, : ஆந்திரமாநிலம், சூளூர்பேட்டை பகுதியை சேர்ந்தவர் யுகேந்தர்(28). தனியார் கம்பெனி ஊழியர். இவர், ஊத்துக்கோட்டை அருகே காட்டு செல்லியம்மன் கோயிலுக்கு குலதெய்வ வழிபாட்டுக்காக தனது தந்தை ஆறுமுகம் மற்றும் குடும்பத்தினருடன் சாமி தரிசனம் செய்வதற்கு வந்துள்ளார். பின்னர் அன்றிரவு கோயிலில் தங்கி, நேற்று முன் தினம் காலை யுகேந்தர் மற்றும் உறவினர் நந்தகுமார் ஆகிய இருவரும் கோயில் குளத்தில் குளிப்பதற்காக இறங்கியுள்ளனர்.

முன்னதாக, கோயில் குளத்தின் ஆழத்தை அறிவதற்காக யுகேந்தர் இறங்கியுள்ளார். இதில் அவர் நிலைதடுமாறி விழுந்து நீருக்குள் மூழ்கிவிட்டார். அவர் நீண்ட நேரமாகியும் வெளியே வரவில்லை. இதனால் கரையில் நின்றிருந்த 4 பேர் குளத்துக்குள் குதித்து, நீருக்குள் மூழ்கிய யுகேந்தரை மீட்டு தேர்வாய்கண்டிகையில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார மையத்தில் சேர்த்தனர். அவரை பரிசோதித்த டாக்டர்கள், யுகேந்தர் ஏற்கெனவே இறந்துவிட்டதாகத் தெரிவித்தனர். இதுகுறித்து ஊத்துக்கோட்டை போலீஸ் எஸ்ஐ முருகேசன் தலைமையில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர்.

The post கோயில் குளத்தில் மூழ்கி வாலிபர் பரிதாப சாவு appeared first on Dinakaran.

Tags : Uthukottai ,Yukender ,Sulurpet ,Andhra Pradesh ,Kattu Chelliyamman ,Oothukottai ,
× RELATED அடிப்படை வசதிகள் செய்து தரக்கோரி அரசு...