×

எத்தியோப்பியா பெண்ணை கரம் பிடித்த தமிழக வாலிபர்: இந்து முறைப்படி திருமணம்

ஆத்தூர்: சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகேயுள்ள கல்பகனூர் கிராமத்தைச் சேர்ந்தவர் செல்லதுரை குட்டி மார்க்ஸ் (32). இவர் மும்பை பல்கலைக்கழகத்தில் இணை பேராசிரியராகவும், ஆராய்ச்சியாளராகவும் பணியாற்றி வருகிறார். இவருக்கும், உடன் பணியாற்றிய எத்தியோப்பியா நாட்டைச் சேர்ந்த பல்கலைக்கழக துணை பேராசிரியர் மென்பரெ அக்லிலு என்ற பெண்ணுக்கும் காதல் மலர்ந்தது. இதையடுத்து, இருவரும் திருமணம் செய்து கொள்ள முடிவு செய்தனர். இதுகுறித்து தங்களது பெற்றோர்களிடம் ஆலோசனை நடத்திய பின், குட்டி மார்க்ஸ் இந்து முறைப்படி திருமணம் செய்து கொள்ள தனது காதலியை தயார்படுத்தினார். இதற்கு அவரது பெற்றோரும் சம்மதம் தெரிவிக்கவே, இவர்களது திருமணம் இந்து முறைப்படி பெத்தநாயக்கன்பாளையத்தில் உள்ள திருமண மண்டபத்தில் இருவீட்டு பெற்றோர், உறவினர்கள் புடைசூழ நடந்தது. செல்லதுரை குட்டி மார்க்ஸ், மென்பரெ அக்லிலு கழுத்தில் தாலி கட்டி திருமணம் செய்து கொண்டார். இந்த திருமணத்தில் ஏராளமானோர் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினர்.

The post எத்தியோப்பியா பெண்ணை கரம் பிடித்த தமிழக வாலிபர்: இந்து முறைப்படி திருமணம் appeared first on Dinakaran.

Tags : Athur ,Chelaturai Kutty Marks ,Kalpaganur ,Salem district ,Mumbai University ,Tamil Nadu ,
× RELATED நெஞ்சை பதற வைக்கும் காட்சிகள் ஆத்தூர்...