×

திண்டுக்கல்லில் டூவீலர் திருடிய வாலிபர் கைது

திண்டுக்கல், ஆக. 14: கோவை மாவட்டம் பொள்ளாச்சியை சேர்ந்தவர் மருதுபாண்டி(35). கூலித்தொழிலாளி. கடந்த எட்டாம் தேதி, திண்டுக்கல் அருகே கூவனூத்துவில் உள்ள மாமனார் வீட்டுக்கு வந்திருந்த அவருக்கு திடீரென வயிற்று வலி ஏற்பட்டது. இதனையடுத்து டூவீலரில் திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சை பெறுவதற்கு சென்றார். அங்கு வாகன நிறுத்துமிடத்தில் டூவீலரை நிறுத்திவிட்டு, மருத்துவமனைக்குள் சிகிச்சை பெற சென்றார். சிறிது நேரம் கழித்து வந்து போது, அவரது டூவீலர் திருடு போனது தெரியவந்தது.

இதனால் அதிர்ச்சியடைந்த அவர், இது குறித்து திண்டுக்கல் நகர் வடக்கு காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். இதன்பேரில் இன்ஸ்பெக்டர் உலகநாதன், எஸ்ஐ மனோகரன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். இதில் மருதுபாண்டியின் டூவீலரை திருடியது, திண்டுக்கல் அருகே உள்ள பொன்மாந்துரையை சேர்ந்த அரவிந்த்குமார்(22) என்பது தெரியவந்தது.

இதனையடுத்து அவரை போலீசார் கைது செய்து விசாரணை செய்தனர். இதில் அவர் பல்வேறு இடங்களில் டூவீலர்களை திருடியது தெரியவந்தது. இதனையடுத்து அவரிடமிருந்த 6 டூவீலர்களை போலீசார் பறிமுதல் செய்தனர். பின்னர் நீதிமன்றத்தில் அவரை ஆஜர்படுத்தி, சிறையில் அடைத்தனர்.

The post திண்டுக்கல்லில் டூவீலர் திருடிய வாலிபர் கைது appeared first on Dinakaran.

Tags : Dindigul ,Marutubandi ,Pollachi, Coimbatore ,Koovanoothu ,Dinakaran ,
× RELATED திண்டுக்கல் மாவட்டம், கனமழை...