×

சுதந்திர தினத்தை முன்னிட்டு திருப்புவனத்தில் ரத்ததான முகாம்

 

திருப்புவனம், ஆக.14: திருப்புவனம் தவ்ஹீத் ஜமாஅத் சார்பாக சுதந்திர தினத்தை முன்னிட்டு ரத்த தான முகாம் நடந்தது. திருப்புவனத்தில் தவ்ஹீத் ஜமாஅத் சார்பில் குடியரசு தினம், சுதந்திர தின நாட்களில் ரத்த தான முகாம் நடத்தப்படுவது வழக்கம். இந்தாண்டு சுதந்திர தினத்தை முன்னிட்டு நேற்று சிவகங்கை அரசு மருத்துவ கல்லூரியுடன் இணைந்து ரத்த தான முகாமை நடத்தினர். முகாமினை மாவட்ட செயலாளர் சாகுல் தொடங்கி வைத்தார். திருப்புவனம் கிளை செயலாளர் தீன் முகமது, மாவட்ட துணை செயலாளர் ஆசிப் முகமது உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

சிவகங்கை மருத்துவ கல்லூரி ரத்த வங்கி மருத்துவ அலுவலர் டாக்டர் வசந்த் தலைமையிலான குழுவினர் ரத்த தானம் செய்பவர்களிடம் ரத்த அழுத்தம், எடை, உயரம் வயது ஆகியவற்றை பரிசோதனை செய்து பின் ரத்தம் சேகரித்தனர். காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை முகாம் நடைபெற்றது. பொதுமக்கள், ஆட்டோ ஓட்டுனர்கள் உள்ளிட்ட 30 பேர் வரை ரத்த தானம் செய்துள்ளனர். ரத்த தானம் செய்தவர்களுக்கு டாக்டர் வசந்த் சான்றிதழ்களை வழங்கினார்.

The post சுதந்திர தினத்தை முன்னிட்டு திருப்புவனத்தில் ரத்ததான முகாம் appeared first on Dinakaran.

Tags : Thirupuvana ,Independence Day ,Tiruppuvanam ,Tawheed Jamaat ,
× RELATED 2024ஆம் ஆண்டு சுதந்திர தின விழாவில்...