×

போடி அருகே பெண் தீயில் கருகி பலி

போடி, ஆக. 14: போடி கொக்கயர்பள்ளி இளங்கோவடிகள் தெருவை சேர்ந்தவர் சுப்ரமணியன். இவர், கேரளாவில் தங்கி சொட்டர் வியாபாரம் செய்து வருகிறார். இவரது மனைவி ரேவதி (40). இவர்களுக்கு வீரலட்சுமி, தனலட்சமி ஆகிய 2 மகள்கள் உள்ளனர். நேற்று மதியம் வீரலட்சுமி வீட்டில் செல்போன் பார்த்துக் கொண்டிருந்தார். அப்போது, இவரது தங்கை தனலட்சுமி எனக்கு செல்போன் வேண்டும் என கேட்டுள்ளார். இதனால் இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. அப்போது, சண்டையை தாயார் ரேவதி விளக்கிவிட்டார். இந்நிலையில் தனலட்சுமி கோபித்து கொண்டு மாடிக்கு சென்று அமர்ந்து கொண்டார்.

எவ்வளவு சொல்லியும் கீழே வரவில்லை. இதனால் மகளை மிரட்டுவதற்காக ரேவதி மண்ணெண்ணையை உடலில் உற்றி தீ வைப்பதாக மிரட்டினர். அப்போது, கையில் பொருத்தியிருந்த தீக்குச்சி எதிர்பாராதவிதமாக அவரது சோலையில் பட்டு தீப்பிடித்தது. இதில் பலத்த காயமடைந்த அவரை அக்கம், பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக தேனி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி ரேவதி பரிதாபமாக உயிரிழந்தார்.இதுகுறித்து போடி நகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

The post போடி அருகே பெண் தீயில் கருகி பலி appeared first on Dinakaran.

Tags : Bodi ,Boddy ,Bodi Kokkayarpalli ,Kerala ,Dinakaran ,
× RELATED போடி-தேவாரம் சாலையில்...