×

கருங்குளம் வெங்கடாஜலபதி கோயிலில் கருடசேவை

 

செய்துங்கநல்லூர்,ஆக.14: கருங்குளம் வகுளகிரி மலையில் உள்ள வெங்கடாஜலபதி கோயிலில் நேற்று முன்தினம் கருடசேவை நடந்தது. காலை 7 மணிக்கு விஸ்வரூபம் 9.30 மணிக்கு சிறப்பு திருமஞ்சனம், 10.30 மணிக்கு அலங்காரம், 11 மணிக்கு தீபாராதனை, பின்னர் பக்தர்களுக்கு தீர்த்தம் சடாரி பிரசாதம் வழங்கப்பட்டது. மாலையில் 6 மணிக்கு சாயரட்சை, 7 மணிக்கு தீபாராதனை.

உத்ஸவர் சீனிவாசப்பெருமாள் முன் மண்டபத்தில் எழுந்தருளி இரவு 10 மணி அளவில் கருட வாகனத்தில் பெருமாள் பக்தர்களுக்கு காட்சி அளித்து மலையில் வலம் வந்தார். பின்னர் பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் அர்ச்சகர்கள் ராஜேஷ் தர்ரிஷி, நிர்வாக அதிகாரி கோவல மணிகண்டன், ஆய்வாளர் நம்பி, கள்ளப்பிரான் கோயில் ஸ்தலத்தார் ராஜப்பா வெங்கடாச்சாரி உட்பட திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

 

 

The post கருங்குளம் வெங்கடாஜலபதி கோயிலில் கருடசேவை appeared first on Dinakaran.

Tags : Garudaseva ,Karunkulam Venkatajalapathi Temple ,Karadanganallur ,Venkatajalapathi temple ,Karunkulam Vagulagiri hill ,
× RELATED சிங்கத்தாகுறிச்சி சுகாதார...