×

நாங்குநேரியில் பட்டியலின மாணவன் தாக்கப்பட்டது தொடர்பாக நீதிபதி சந்துரு தலைமையில் விசாரணை குழு அமைத்தது தமிழ்நாடு அரசு..!!

சென்னை: நாங்குநேரியில் பட்டியலின மாணவன் தாக்கப்பட்டது தொடர்பாக நீதிபதி சந்துரு தலைமையில் தமிழ்நாடு அரசு விசாரணை குழு அமைத்துள்ளது. மாணவர்களிடையே சாதி, இன உணர்வுகளால் ஏற்படும் வன்முறையை தடுக்க நீதிபதி சந்துரு குழு வழிகாட்டுதல் வகுக்கும். கல்வியாளர்கள், மாணவர்கள் பெற்றோர்கள் உட்பட பல்வேறு தரப்பினரின் கருத்துகளை பெற்று நீதிபதி சந்துரு குழு அறிக்கை அளிக்கும். இளைய சமுதாயத்தினரிடையே சாதி, இன உணர்வு பரவி இருப்பது எதிர்கால தமிழ்நாட்டு நலனுக்கு உகந்தது அல்ல. உடனடியாக சரி செய்யப்பட வேண்டிய முக்கிய பிரச்சனையில் அரசு எடுக்க வேண்டிய நடவடிக்கை பற்றி சந்துரு குழு ஆலோசனை தரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

The post நாங்குநேரியில் பட்டியலின மாணவன் தாக்கப்பட்டது தொடர்பாக நீதிபதி சந்துரு தலைமையில் விசாரணை குழு அமைத்தது தமிழ்நாடு அரசு..!! appeared first on Dinakaran.

Tags : Tamil Nadu Government ,Judge ,Sanduru ,Nanguneri Chennai ,Justice ,Santhuru ,Nanguneri ,
× RELATED ஆன்லைன் சூதாட்டம் பற்றி...