×

கோவை சரக புதிய டிஐஜி பொறுப்பேற்பு

 

கோவை, ஆக.12: கோவை சரக டிஐஜி.,யாக சரவண சுந்தர் நேற்று பொறுப்பேற்று கொண்டார். கோவை சரக டிஐஜியாக பணியாற்றி வந்தவர் விஜயகுமார். இவர், கடந்த மாதம் 7ம் தேதி ரேஸ்கோர்சில் உள்ள முகாம் அலுவலகத்தில் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்டார். காலியாக உள்ள அவரது இடத்திற்கு திருச்சி சரக டிஐஜியாக பணியாற்றி வந்த சரவண சுந்தர் நியமிக்கப்பட்டார். அவர் நேற்று ரேஸ்கோர்சில் உள்ள அலுவலகத்தில் டிஐஜியாக பொறுப்பேற்று கொண்டார். புதிதாக பொறுப்பேற்று கொண்ட டிஐஜி சரவண சுந்தருக்கு போலீஸ் அதிகாரிகள், இன்ஸ்பெக்டர்கள் மற்றும் காவலர்கள் தங்களது வாழ்த்துகளை தெரிவித்தனர்.

The post கோவை சரக புதிய டிஐஜி பொறுப்பேற்பு appeared first on Dinakaran.

Tags : Coimbatore Cargo ,Coimbatore ,Saravana Sundar ,DIG ,Dinakaran ,
× RELATED கோவை சர்வதேச விமான நிலையத்துக்கு...