×

மணிப்பூரில் கலவரம் ஏன் நடக்கிறது என்பதுதான் விஷயம்; அதற்கு மாறாக பிரதமர் கிண்டல் செய்திருக்கக்கூடாது: ராகுல் காந்தி பேட்டி

டெல்லி: மணிப்பூரில் கலவரம் ஏன் நடக்கிறது என்பதுதான் விஷயம்; அதற்கு மாறாக பிரதமர் கிண்டல் செய்திருக்கக்கூடாது என்று ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். மக்களவையில் நேற்று பிரதமர் மோடி 2 மணி நேரம் பேசியது தொடர்பாக காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது பேசிய அவர், மணிப்பூர் விவகாரத்தை பிரதமர் மோடி நகைப்புக்குரியதாக கருதக் கூடாது. மணிப்பூர் விவகாரம் குறித்து பிரதமர் மோடி நேற்று 2 நிமிடங்கள் மட்டுமே பேசினார். மணிப்பூருக்கு பிரதமர் மோடி நேரில் செல்ல வேண்டியது அவசியம் என தெரிவித்தார்.

The post மணிப்பூரில் கலவரம் ஏன் நடக்கிறது என்பதுதான் விஷயம்; அதற்கு மாறாக பிரதமர் கிண்டல் செய்திருக்கக்கூடாது: ராகுல் காந்தி பேட்டி appeared first on Dinakaran.

Tags : Manipur ,Raqul Gandhi ,Delhi ,Ragul Gandhi ,Rahaul Gandhi ,
× RELATED மணிப்பூர் மாநிலம் மொய்ராங்கில் உள்ள...