ராணிப்பேட்டை: பிரசித்தி பெற்ற படவேட்டம்மன் கோயிலில் கடைசி ஆடிவெள்ளியை முன்னிட்டு பால்குட ஊர்வலம் நடைபெற்று வருகிறது. 1008 பால்குடங்களை தலையில் சுமந்தபடி பக்தர்கள் ஊர்வலம் வந்தனர். காப்பு கட்டி விரதம் இருந்த பக்தர்கள் அலகு குத்தி நேர்த்திக்கடனை செலுத்தினர். ஊர்வலத்திற்கு முன்பு, மேளதாளத்திற்கு ஏற்ப சிறார்கள், இளைஞர்கள் நடனமாடி மகிழ்ந்தனர்.
The post பிரசித்தி பெற்ற படவேட்டம்மன் கோயிலில் கடைசி ஆடிவெள்ளியை முன்னிட்டு பால்குட ஊர்வலம்..!! appeared first on Dinakaran.