- AIADMK MLA
- கடையநல்லூர்
- அஇஅதிமுக
- புளியங்குடி
- கண்டமான்குளத்துக்கரை
- வலசை
- கடையநல்லூர்-சேத்திரமரம் சாலை
- தென்காசி மாவட்டம்
- சட்டமன்ற உறுப்பினர்
கடையநல்லூர்: தென்காசி மாவட்டம், கடையநல்லூர் – சேர்ந்தமரம் சாலையில் வலசை கிராமத்தில் கண்டமான்குளத்துக்கரை அருகே புளியங்குடியைச் சேர்ந்த முன்னாள் அதிமுக எம்எல்ஏ துரையப்பாவுக்கு சொந்தமான கிணறு உள்ளது. அங்கு சாக்கு மூட்டை ஒன்று துர்நாற்றத்துடன் மிதப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. போலீசார், கடையநல்லூர் தீயணைப்பு நிலைய வீரர்கள் உதவியுடன் அந்த சாக்கு மூட்டையை மீட்டனர். அதில் சுமார் 25 வயது மதிக்கத்தக்க இளம்பெண், அடித்துக் கொலை செய்யப்பட்டு சாக்குமூட்டையில் கட்டி வீசப்பட்டிருந்தது தெரியவந்தது. அந்த பெண்ணின் வலது கையில் இதயம் படம் வரைந்து எம்.வி. என்று ஆங்கிலத்தில் பச்சை குத்தப்பட்டிருந்தது.
The post அதிமுக மாஜி எம்எல்ஏ தோட்டத்தில் இளம்பெண் அடித்துக் கொலை appeared first on Dinakaran.