×

சிங்கங்களை பாதுகாத்து பல தலைமுறைகளை உருவாக்குவோம்: பிரதமர் மோடி

டெல்லி : சிங்கங்களை பாதுகாத்து பல தலைமுறைகளை உருவாக்குவோம் என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.காடுகளின் ராஜா என்று அழைக்கப்படும் சிங்கங்களுக்கான தினம் இன்று!
சிங்கங்களையும் அவற்றின் வாழ்விடங்களையும் | பாதுகாக்க ஒவ்வொரு வருடமும் ஆகஸ்ட் 10-ம் தேதி உலக சிங்க தினம் கடைபிடிக்கப்படுகிறது. சிங்கத்தினத்தை முன்னிட்டு குஜராத்தில் பல்வேறு நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

அந்த மாநிலத்தில் 8,500க்கும் மேற்பட்ட கல்வி நிறுவனங்களில் சிங்க பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த பிரச்சாரம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்த நிலையில் பிரதமர் மோடி வெளியிட்டுள்ள செய்தியில், “ஆசிய சிங்கங்களின் வாழ்விடமாக இருப்பதில் இந்தியா பெருமைகொள்கிறது. கடந்த சில வருடங்களாகவே சிங்கங்களின் எண்ணிக்கை உயர்ந்துவருகிறது; அவற்றை மேலும் பாதுகாத்து, பல தலைமுறைகளை உருவாக்குவோம்,”எனத் தெரிவித்துள்ளார்.

The post சிங்கங்களை பாதுகாத்து பல தலைமுறைகளை உருவாக்குவோம்: பிரதமர் மோடி appeared first on Dinakaran.

Tags : PM Modi ,Delhi ,Dinakaran ,
× RELATED எல்லோரையும் போல நானும் எனது ஆட்டத்தை...