×

விவசாயிகள் சங்கம் ஆர்ப்பாட்டம்

காஞ்சிபுரம், ஆக.10: தமிழ்நாடு விவசாயிகள் சங்கம், மலைவாழ் மக்கள் சங்கம் மற்றும் அனைத்துத்துறை ஓய்வு பெற்றோர் சங்கம் சார்பில், கார்ப்பரேட்டுகள் புறக்கணிப்பை முன்னிறுத்து வெள்ளையனே வெளியேறு ஆர்ப்பாட்டம் காஞ்சிபுரம் காவலான்கேட் பகுதியில் நேற்று நடைபெற்றது. இதில் சங்கத்தின் மாவட்ட துணை தலைவர் நந்தகோபால் தலைமை தாங்கினார். விவசாயிகள் சங்க மாவட்ட தலைவர் சாரங்கன், செயலாளர் நேரு மற்றும் நிர்வாகிகள் சீத்தாராமன், பெருமாள், தென்னரசு, தாமோதரன், லட்சுமிபதி, வேணுகோபால் ஆகியோர் கண்டன உரையாற்றினர். இந்திய நாட்டின் விவசாயத்தையும், மக்கள் பயன்படுத்தும் உணவு தானியத்தை கார்ப்பரேட் கம்பெனிகளுக்கு தாரை வார்க்காதே, பொதுத்துறை நிறுவனங்களை தனியாருக்கு விற்காதே, பொதுமக்கள் பயன்படுத்தும் அனைத்து பொருள்களின் விலை உயர்வை கட்டுப்படுத்து, பொது சிவில் சட்டத்தை அமல்படுத்தக்கூடாது என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

The post விவசாயிகள் சங்கம் ஆர்ப்பாட்டம் appeared first on Dinakaran.

Tags : Kanchipuram ,Tamil Nadu Farmers' Association ,Highland People's Association ,All Sector Retired Parents' Association ,Farmers' Association ,Dinakaran ,
× RELATED கொரோனா காலத்தில் நோயாளிகளுக்கு உணவு...