சிவகங்கை: சிவகங்கை அருகே, நாட்டரசன்கோட்டை கே.எம்.எஸ்.சி. பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் தமிழ்நாடு அரசின் விலையில்லா சைக்கிள்கள் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. தலைமையாசிரியை மகாலெட்சுமி வரவேற்றார். நிகழ்ச்சியில் பங்கேற்ற பேரூராட்சி தலைவி பிரியதர்ஷினி கவிராஜ், துணைத்தலைவி கார்த்திகா முருகானந்தம் ஆகியோர் மாணவிகளுக்கு சைக்கிள்களை வழங்கினர்.நிகழ்ச்சியில் பள்ளிக்குழு உறுப்பினர் சுப்பிரமணியன், பள்ளி வளர்ச்சிக்குழு உறுப்பினர் கண்ணப்பன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
The post விலையில்லா சைக்கிள் வழங்கல் appeared first on Dinakaran.