சென்னை: ஈரோடு புத்தக கண்காட்சியில், பாஜகவினருடன் சேர்ந்து புத்தக விற்பனையாளர்களை மிரட்டிய காவல் ஆய்வாளர் மீது தமிழ்நாடு அரசு எடுத்த நடவடிக்கையை கே.பாலகிருஷ்ணன் வரவேற்றுள்ளார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை: ஈரோட்டில் நடந்து வரும் புத்தகக் கண்காட்சியில், பாஜக, ஆர்.எஸ்.எஸ் மதவெறி அரசியலை அம்பலப்படுத்தும் புத்தகங்களை விற்பதை சில சங் பரிவார நபர்களோடு, காவல்துறை ஆய்வாளர் ஒருவரும் சேர்ந்து புத்தக விற்பனையாளர்களை மிரட்டியுள்ளார். உடனடியாக அந்த காவலர்களை இடம் மாற்றம் செய்து தமிழ்நாடு அரசு நடவடிக்கை எடுத்துள்ளது வரவேற்கத்தக்கது.
மதிமுக பொருளாளர் செந்தில் அதிபன் எழுதியுள்ள ‘இந்துத்துவப் பாசிசம் வேர்களும் விழுதுகளும்’ என்ற புத்தகம் பாஜக அரசியல் எப்படி இந்து நம்பிக்கையை தனது லாபத்திற்காக பயன்படுத்துகிறது என அம்பலப்படுத்துகிறது. காவல்துறையில் சிலர் இதுபோன்ற சிந்தனைக்கு பலியாகியிருப்பது சில நிகழ்வுகளில் தெரிகிறது. சில நாட்கள் முன், மத வெறுப்புடன் இணைய வழியாக பேசிய சென்னை புளியந்தோப்பு போக்குவரத்துக் காவல்துறை ஆய்வாளர் ராஜேந்திரன் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார். உறுதியுடன் தமிழ்நாடு அரசு மேற்கொண்டுள்ள நடவடிக்கைகள் வரவேற்கத்தக்கவை.
The post ஈரோடு புத்தக கண்காட்சியில் பாஜவினருடன் சேர்ந்து விற்பனையாளர்களை மிரட்டிய இன்ஸ்பெக்டர் மீது நடவடிக்கை: அரசுக்கு கே.பாலகிருஷ்ணன் வரவேற்பு appeared first on Dinakaran.
