×

லைசென்ஸ் இல்லாமல் உணவகங்கள், தாபாவில் மது விற்பவர் மீது சட்ட நடவடிக்கை: ஆணையர் எச்சரிக்கை

சென்னை: உணவகங்கள், தாபா, சிறுகடைகளில் லைசென்ஸ் இல்லாமல் மதுபானம் விற்பனை செய்தால் கடும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று மதுவிலக்கு ஆணையர் எச்சரிக்கை விடுத்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்ட அறிக்கை: தமிழ்நாட்டில் மதுபானங்கள் விற்பனை செய்யும் பொருட்டு தமிழ்நாடு மதுபானம் விதிகள், 1981-ன் கீழ் மதுபான விற்பனை உரிமங்கள் வழங்கப்படுகிறது. அவ்வாறு உரிமம் ஏதும் பெறாமல் உணவகங்கள், தாபா போன்ற சிறுகடைகள் மற்றும் உரிமம் பெறாத வேறு இடத்திலும் மதுபானம் விற்பனை செய்வது சட்டப்படி குற்றமாகும். மீறி மதுபானம் விற்பனை செய்யும் நபர்கள் மீது கடுமையான சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

The post லைசென்ஸ் இல்லாமல் உணவகங்கள், தாபாவில் மது விற்பவர் மீது சட்ட நடவடிக்கை: ஆணையர் எச்சரிக்கை appeared first on Dinakaran.

Tags : Dhaba ,Chennai ,Dinakaran ,
× RELATED சென்னை விமான நிலையத்துக்கு வெடிகுண்டு மிரட்டல்