×

கடையம் அருகே மோட்டார் அறையில் பதுங்கிய பாம்பு மீட்பு

கடையம்: கடையம் அருகே மீனாட்சிபுரத்தை சேர்ந்த பரமசிவன் என்பவருக்கு சொந்தமான தோட்டம் அந்த பகுதியில் உள்ளது. அவரது மகன் வழக்கம்போல் நேற்றுமுன்தினம் இரவு மின் விளக்கு போடுவதற்காக மோட்டார் அறைக்கு சென்றார்.

அங்கு பாம்பு இருந்தது கண்டு அலறி அடித்து வெளியே ஓடிவந்து வனத்துறைக்கு தகவல் தெரிவித்தார். கடையம் வனச்சரகர் கருணாமூர்த்தி உத்தரவின்படி வேட்டை தடுப்பு காவலர் வேல்ராஜ் சம்பவ இடத்திற்கு சென்று சுமார் ஒரு மணி நேரம் போராடி மோட்டார் இயந்திரத்தில் பதுங்கி இருந்த பாம்பை பத்திரமாக மீட்டனர். பின்னர் இலுப்பையாறு பீட் அடர்ந்த வனப்பகுதியில் பாம்பு விடப்பட்டது.

The post கடையம் அருகே மோட்டார் அறையில் பதுங்கிய பாம்பு மீட்பு appeared first on Dinakaran.

Tags : Kadayam ,Paramasivan ,Meenakshipuram ,Dinakaran ,
× RELATED பெண்ணை ஆபாசமாக சித்தரித்து வலைதளத்தில் வெளியிட்டவர் கைது