- சிதம்பரம் அரசு கல்லூரி
- புவனகிரி
- அரசு கலைக் கல்லூரி
- சி. முட்லூர்
- சிதம்பரம்
- சிதம்பரம் அரசு கல்லூரி
- தின மலர்
புவனகிரி, ஆக. 9: சிதம்பரம் அருகே உள்ள சி.முட்லூர் கிராமத்தில் அரசு கலைக்கல்லூரி உள்ளது. இக்கல்லூரியில் சுமார் 500க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர். இக்கல்லூரியில் கடந்த மே மாதம் தேர்வுகள் நடந்தது. இந்த தேர்வுகளின் முடிவுகள் கடந்த 10 நாட்களுக்கு முன்பு வெளியானது. அப்போது தேர்வு எழுதிய பல மாணவர்களுக்கு வருகை பதிவேடு இல்லை எனவும், பல மாணவர்களின் தேர்வு முடிவுகள் நிறுத்தி வைக்கப்பட்டு உள்ளதாகவும் முடிவுகள் வெளியானது. இந்நிலையில் அரியர் எழுதிய பல மாணவர்களுக்கு தேர்வு முடிவுகள் சரிவர வரவில்லை. இதனால் தேர்வு முடிவுகளில் குழப்பம் ஏற்பட்டுள்ளதாக கூறி மாணவர்கள் நேற்று கல்லூரி வளாகத்தில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். 100க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் கைகளில் பதாகைகளை ஏந்தியபடி குழப்பமான தேர்வு முடிவுகளை கண்டித்து கல்லூரி மற்றும் பல்கலைக்கழக நிர்வாகத்தின் மீது குற்றம் சுமத்தி கண்டன முழக்கங்களை எழுப்பினர். அப்போது தேர்வு முடிவுகளில் உள்ள தவறுகளை சரி செய்து மீண்டும் முடிவுகளை வெளியிட வேண்டும் எனக் கூறினர். பின்னர் சிறிது நேரத்தில் அனைவரும் கலைந்து சென்றனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
The post தேர்வு முடிவுகளில் குளறுபடி சிதம்பரம் அரசு கல்லூரி மாணவர்கள் ஆர்ப்பாட்டம் appeared first on Dinakaran.