×

மதுபாட்டில் விற்றவர் கைது

விருத்தாசலம், ஆக. 9: விருத்தாசலம்-கடலூர் புறவழிச் சாலை அருகே மதுபாட்டில்கள் விற்கப்படுவதாக விருத்தாசலம் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து சப்-இன்ஸ்பெக்டர் அய்யனார் தலைமையிலான போலீசார் குப்பநத்தம் புறவழிச்சாலை பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது திட்டக்குடி அடுத்த காரையூர் கிராமத்தை சேர்ந்த ஜெயராமன்(45) என்பவர் அனுமதியின்றி மதுபாட்டில்கள் விற்பனை செய்தது தெரியவந்தது. இது குறித்து விருத்தாசலம் போலீசார் வழக்குப் பதிந்து ஜெயராமனை கைது செய்தனர். மேலும் அவரிடமிருந்து 5 குவார்ட்டர் பாட்டில்களை பறிமுதல் செய்தனர்.

The post மதுபாட்டில் விற்றவர் கைது appeared first on Dinakaran.

Tags : Vridthachalam ,Vriddhachalam ,Vriddhachalam-Kadalur ,Dinakaran ,
× RELATED விருத்தாசலம் அருகே ஓடும் ரயிலில்...