×

கொள்ளிடத்தில் நடைபெற்ற பேச்சு போட்டியில் சேத்திருப்பு பள்ளி மாணவிகள் சாதனை

 

கொள்ளிடம், ஆக.9: கொள்ளிடத்தில் நடந்த பேச்சு போட்டியில் சேத்திருப்பு பள்ளி மாணவிகள் முதல் இடத்தை பெற்று சாதனை படைத்துள்ளனர். மயிலாடுதுறை மாவட்டம் கொள்ளிடம் வட்டார கல்வி அலுவலகத்தில் நேற்று கொள்ளிடம் வட்டார அளவில் உள்ள நடுநிலைப்பள்ளி மாணவர்களுக்கான பேச்சுப்போட்டி தமிழ் வளர்ச்சித் துறை சார்பில் நடைபெற்றது. வட்டார கல்வி அலுவலர்கள் சரஸ்வதி, கோமதி, வட்டார வள மைய மேற்பார்வையாளர் ஞான புகழேந்தி, ஆசிரியர் பயிற்றுனர் ஐசக் ஞானராஜ், பள்ளி ஆசிரியர்கள் பாலு, ராஜசேகர் மற்றும் ஆசிரியர்கள் மாணவர்கள் கலந்து கொண்டனர்.

முத்தமிழ் அறிஞர் கலைஞர் மற்றும் டாக்டர் அம்பேத்கர் என்ற இரு தலைப்புகளில் நடைபெற்ற பேச்சு போட்டியில் வட்டார அளவிலான நடுநிலைப்பள்ளி மாணவ மாணவிகள் கலந்து கொண்டனர். கொள்ளிடம் அருகே உள்ள சேத்திருப்பு நடுநிலைப்பள்ளியில் 8ம் வகுப்பு பயின்று வரும் மாணவிகள் வைஷ்ணவி மற்றும் வர்ஷா ஆகிய இருவரும் வட்டார அளவில் முதன்மையானவர்களாக வெற்றி பெற்று தேர்வு செய்யப்பட்டுள்ளனர். வட்டார அளவில் முதல் இடத்தில் வெற்றி பெற்ற இரு மாணவிகளையும் கல்வி அலுவலர்கள்,ஆசிரியர்கள், பெற்றோர் வாழ்த்து பாராட்டினர்.

The post கொள்ளிடத்தில் நடைபெற்ற பேச்சு போட்டியில் சேத்திருப்பு பள்ளி மாணவிகள் சாதனை appeared first on Dinakaran.

Tags : Chettirupu ,Kollid ,Kollidam ,Chetirupu ,Dinakaran ,
× RELATED மே தினத்தை முன்னிட்டு 2 மணி நேர தொடர் சாதனை சிலம்பாட்டம்