- ஜனாதிபதி முர்மு
- தில்லி
- சென்னை
- ஜனாதிபதி புலிஃபிட்டி முர்மு
- ஜனாதிபதி
- இந்தியா
- திராவூபதி முருமு
- தமிழ்நாடு: உச்ச நீதிமன்றம்
- ஜனாதிபதி
- முர்மு
சென்னை: ஜனாதிபதி திரவுபதி முர்மு நாள் பயணம் முடிந்து, நேற்று டெல்லி சென்றார். இந்திய ஜனாதிபதி திரவுபதி முர்மு, தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் 4 நாட்கள் பயணம் மேற்கொண்டார். இந்நிலையில் சுற்றுப்பயணம் முடிந்து நேற்று (செவ்வாய்) மாலை 6.05 மணிக்கு, சென்னையில் இருந்து இந்திய விமானப்படை தனி விமானத்தில், டெல்லிக்கு புறப்பட்டு சென்றார்.முன்னதாக, ஜனாதிபதி திரவுபதி முர்முவை சென்னை விமான நிலையத்தில், தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என். ரவி, முதல்வர் மு.க.ஸ்டாலின், அமைச்சர்கள் துரைமுருகன், ஐ.பெரியசாமி, தங்கம் தென்னரசு, அன்பரசன், சென்னை மாநகர மேயர் பிரியா, முப்படை உயர் அதிகாரிகள், தமிழ்நாடு அரசு உயர் அதிகாரிகள், காவல்துறை உயர் அதிகாரிகள், செங்கல்பட்டு கலெக்டர் உள்ளிட்டோர் வழிஅனுப்பி வைத்தனர். முன்னதாக, ஜனாதிபதி திரவுபதி முர்மு, புதுச்சேரியிலிருந்து இந்திய விமானப்படை தனி ஹெலிகாப்டரில் நேற்று மாலை சென்னை பழைய விமான நிலையம் வந்தார்.
The post 4 நாள் பயணம் முடிந்து ஜனாதிபதி முர்மு டெல்லி சென்றார் appeared first on Dinakaran.