×

சுரண்டை அருகே காட்டுப்பகுதியில் பதுக்கிய 30 மூடை ரேஷன் பறிமுதல்

சுரண்டை: சுரண்டை அருகே காட்டுப்பகுதியில் பதுக்கி வைத்திருந்த 30 மூடை ரேஷன் அரிசியை போலீசார் பறிமுதல் செய்தனர். சுரண்டை அடுத்த சேர்ந்தமரம் அருகே உள்ள கோவிலாண்டனூர் மேலத்தெருவை சேர்ந்த சார்லஸ் மகன் திவாகர் (30). இவர் ரேஷன் அரிசியை கோவிலாண்டனூர் காட்டுப்பகுதியில் பதுக்கி வைத்து கேரளாவுக்கு கடத்தி வந்ததாக கூறப்படுகிறது.

இதுகுறித்து கிடைத்த தகவலின் பெயரில் சேர்ந்தமரம் போலீசார் கோவிலாண்டனூர் காட்டுப் பகுதியில் சோதனை நடத்தினர். அப்போது அங்கு பதுக்கி வைக்கப்பட்டிருந்த 30 ரேஷன் அரிசியை பறிமுதல் செய்து திவாகரை கைது செய்தனர்.

The post சுரண்டை அருகே காட்டுப்பகுதியில் பதுக்கிய 30 மூடை ரேஷன் பறிமுதல் appeared first on Dinakaran.

Tags : Surandai ,Dinakaran ,
× RELATED சுரண்டையில் நள்ளிரவில் மர்மநபர் துணிகரம் ஏடிஎம்மில் கொள்ளை முயற்சி