×

கொடைக்கானல் பேரிஜம் வனப்பகுதியில் யானைகள் முகாம்: சுற்றுலா பயணிகளுக்கு தடை

கொடைக்கானல்: கொடைக்கானல் பேரிஜம் வனப்பகுதியில் யானைக்கூட்டம் அவ்வப்போது முகாமிட்டு வருகிறது. நேற்று முன்தினம் மாலை யானைக்கூட்டம் ஒன்று இப்பகுதியில் நுழைந்தது. நேற்று முதல் அந்த யானைக்கூட்டம் இந்த பகுதியில் முகாமிட்டு வருகிறது. தற்போது, வனத்தில் இருந்த சவுக்கு மரம், யூகலிப்டஸ் மரங்கள் அகற்றப்பட்டு சோலை மரக்கன்றுகள் நடப்பட்டு உள்ளது.

இதனால் இப்பகுதியில் புற்கள் தளைத்து யானைகளுக்கு தேவையான உணவு கிடைக்கிறது. இதனால் யானைக்கூட்டம் கடந்த 2 மாதங்களில் 4 முறை இப்பகுதியில் முகாமிட்டுள்ளது. இந்நிலையில் கடந்த 2 நாட்களாக யானைக்கூட்டம் இப்பகுதியில் முகாமிட்டு உள்ளன. இதனால் பேரிஜம் ஏரிக்கு சுற்றுலா பயணிகள் செல்ல வனத்துறையினர் தற்காலிக தடை விதித்து உள்ளனர். யானைக்கூட்டம் இப்பகுதியை விட்டு அகன்ற பிறகு அனுமதி வழங்கப்படும் என வனத்துறையினர் தெரிவித்துள்ளனர்.

யானைகள் நடமாட்டம் குறித்து மாவட்ட வனத்துறை அலுவலர் யோகேஷ்குமார் மீனா தலைமையில், ஏசிஎப் சக்திவேல், வனத்துறை ரேஞ்சர்கள் சிவக்குமார், செந்தில்குமார், உள்ளிட்டவர்கள் இந்தப் பகுதியில் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர். மேலும் யானைகள் எந்த பகுதி வழியாக உள்ளே நுழைகிறது. இதனுடைய நடமாட்டம் எவ்வாறு உள்ளது என்பது குறித்தும், நகருக்குள் யானைக்கூட்டம் நுழையாத வண்ணம் எவ்வாறு தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்வது குறித்தும் ஆய்வு செய்தனர். மேலும் யானைகளின் நடமாட்டம் பற்றி தொடர்ந்து வனத்துறையினர் கண்காணித்து வருகின்றனர்.

The post கொடைக்கானல் பேரிஜம் வனப்பகுதியில் யானைகள் முகாம்: சுற்றுலா பயணிகளுக்கு தடை appeared first on Dinakaran.

Tags : Camp ,Kodaikanal Barijam ,Kodaikanal ,Kodaikanal Barijam Wilderness Elephants Camp ,Dinakaran ,
× RELATED பண்ருட்டியில் அடுத்த எஸ். ஏரி பாளையம். கிராமத்தில் தேர்தல் புறக்கணிப்பு