×

காங்கிரஸ் கட்சி உறுப்பினர்கள் தொடர் அமளி: மக்களவைவை 12 மணி வரை ஒத்திவைத்தார் சபாநாயகர் ஓம் பிர்லா..!!

டெல்லி: எதிர்க்கட்சிகள் தொடர் முழக்கத்தால் மக்களவை நண்பகல் 12 மணி வரை ஒத்திவைக்கப்பட்டது. தொடங்கிய சில நிமிடங்களிலேயே எதிர்க்கட்சிகளின் அமளி காரணமாக மக்களவை 12 மணி வரை ஒத்திவைக்கப்பட்டது. பிரதமர் நரேந்திர மோடி அரசுக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானம் மீது மக்களவையில் பகல் 12 மணிக்கு விவாதம் தொடங்குகிறது. கேள்வி நேரத்தை ஒத்திவைத்துவிட்டு விவாதம் நடத்த எதிர்க்கட்சி உறுப்பினர்கள் வலியுறுத்தினர். மணிப்பூர் விவகாரம் குறித்து பிரதமர் பதிலளிக்க கோரி எதிர்க்கட்சிகள் முழக்கம் எழுப்பியதால் அமளி ஏற்பட்டது.

காங்கிரஸ் எம்.பி., ராகுல்காந்தி, காங்கிரஸ் கட்சி குறித்து பாஜக எம்.பி. ,நிஷிகாந்த் தூபே தெரிவித்த கருத்தை அவை குறிப்பில் இருந்து நீக்க வலியுறுத்தப்பட்டது. காங்கிரஸ் மக்களவை குழு தலைவர் ஆதிரஞ்சன் சவுத்ரியின் கோரிக்கையை ஏற்க சபாநாயகர் ஓம் பிர்லா மறுப்பு தெரிவித்தார். தொடர்ந்து கேள்வி நேரத்தை ஒத்திவைத்துவிட்டு விவாதம் நடத்த எதிர்க்கட்சிகள் விடுத்த கோரிக்கையை நிராகரித்து மக்களவை 12 மணி வரை ஒத்திவைக்கப்பட்டது. சீனா உடனான எல்லை பிரச்சனை குறித்து மக்களவையில் விவாதிக்க கோரி காங். எம்.பி. மணிஷ் திவாரி ஒத்திவைப்பு தீர்மானம் கொண்டுவந்தார்.

The post காங்கிரஸ் கட்சி உறுப்பினர்கள் தொடர் அமளி: மக்களவைவை 12 மணி வரை ஒத்திவைத்தார் சபாநாயகர் ஓம் பிர்லா..!! appeared first on Dinakaran.

Tags : Congress ,Aamali ,Speaker ,Om Birla ,Delhi ,Congress Party ,
× RELATED இந்தூர் காங்.வேட்பாளர் விலகியது...