×

கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் அருகே சொகுசுப் பேருந்து கவிழ்ந்து விபத்து; பெண் உட்பட 2 பேர் பலி.. 20க்கும் மேற்பட்டோர் படுகாயம்..!!

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் அருகே சாலையின் நடுவே சொகுசுப் பேருந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 2 பேர் உயிரிழந்தனர். 20க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர். புதுச்சேரியில் இருந்து 39 பயணிகளுடன் திருப்பூர் நோக்கி சென்று கொண்டிருந்த தனியார் சொகுசு பேருந்து ஒன்று சின்னசேலம் அருகே உள்ள காளசமுத்திரம் பகுதியில் வந்தபோது கவிழ்ந்தது. பேருந்தில் சிக்கித் தவித்தவர்களை சாலையில் சென்ற பொதுமக்கள் காப்பாற்றினர்.

தகவல் அறிந்து சென்ற காவல்துறை மற்றும் தீயணைப்புத் துறையினர் கவிழ்ந்த பேருந்தை ஜே.சி.பி. மூலம் அகற்றினர். இந்த விபத்தில் ஒரு பெண் உட்பட 2 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும் 20க்கும் மேற்பட்டோர் படுகாயங்களுடன் கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். அவர்களில் கை, கால்களை இழந்த 7 பேர் மேல்சிகிச்சைக்காக சேலம் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். தப்பியோடிய பேருந்து ஓட்டுனரை காவல்துறையினர் தேடி வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

The post கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் அருகே சொகுசுப் பேருந்து கவிழ்ந்து விபத்து; பெண் உட்பட 2 பேர் பலி.. 20க்கும் மேற்பட்டோர் படுகாயம்..!! appeared first on Dinakaran.

Tags : Chinnaselam, Kallakkiruchichi District ,Kallakkurichi ,Chinnaselam, Kallakkurichi district ,Chinnaselam ,Kallakkurichi District ,
× RELATED விழுப்புரம், கள்ளக்குறிச்சி...