×

விவசாயிக்கு அரிவாள் வெட்டு

மானூர்,ஆக.8: மானூர் அருகே பள்ளமடை கிராமத்தைச் சேர்ந்தவர் முத்துகிருஷ்ணன் மகன் முத்துசெல்வன் (22). இவர் மாடு வளர்த்து வருகிறார். அதற்கு தேவையான தவிடு மூடைகளை மாட்டு தொழுவத்தில் வைத்துள்ளார். இதனை அருகில் உள்ள வீட்டில் வசிக்கும் மாரியப்பன் மகன் சிவன்பெருமாள் (33) என்பவரது குழந்தை அள்ளிச்சென்றதாக கூறப்படுகிறது. இதனால் இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த சிவன்பெருமாள் அரிவாளால் முத்து செல்வத்தின் இடது கையில் வெட்டியுள்ளார். இதையடுத்து அவர் அழகியபாண்டியபுரத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். இது குறித்து மானூர் போலீசில் அவர் அளித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து சிவன் பெருமாளை தேடி வருகின்றனர்.

The post விவசாயிக்கு அரிவாள் வெட்டு appeared first on Dinakaran.

Tags : Manur ,Muthukrishnan ,Muthuselvan ,Pallamadai ,
× RELATED மானூர் அருகே வாலிபரை தாக்கிய 4 பேர் மீது வழக்கு