×

வேடசந்தூர் அருகே தெருநாய்கள் கடித்து 2 ஆடுகள் பலி

வேடசந்தூர், ஆக. 8: வேடசந்தூர் அருகே டொக்குவீரன்பட்டியை சேர்ந்தவர் முருகேசன். இவரது மனைவி பழனியம்மாள். இவர்கள் தோட்டத்து வேலைகள் செய்து கொண்டு ஆடு, மாடுகளை வளர்த்து வருகின்றனர். சம்பவத்தன்று 2 சினை ஆடுகளை மேய்ச்சலுக்காக தோட்டத்தில் உள்ள மரத்தில் கட்டி வைத்துவிட்டு முருகேசன் வெளியே சென்றுள்ளார். அப்போது, இவர்களது தோட்டத்திற்குள் புகுந்த 4க்கும் மேற்பட்ட நாய்கள் சினை ஆடுகளை கடித்து குதறியதில் அவை உயிரிழந்தன.

வெளியே சென்று வந்த முருகேசன் 2 ஆடுகளும் நாய்கள் கடித்து இறந்து கிடப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தார். இதுகுறித்து அப்பகுதியினர் கூறுகையில், ‘இப்பகுதியில் உலா வரும் நாய்களை பிடித்து மீதமுள்ள கால்நடைகளை பாதுகாக்க எங்களுக்கு உதவ வேண்டும்’ என்றனர். கடந்த வாரம் வேடசந்தூர் புறநகர் பகுதியில் பள்ளி, கல்லூரி மாணவர்கள் உள்பட 7 பேரை நாய்கள் கடித்தது குறிப்பிடத்தக்கது.

The post வேடசந்தூர் அருகே தெருநாய்கள் கடித்து 2 ஆடுகள் பலி appeared first on Dinakaran.

Tags : Vedasandur ,Tokuveeranpatti ,Palaniammal ,Dinakaran ,
× RELATED திண்டுக்கலில் அறுந்து கிடந்த...