மன்னார்குடி, ஆக. 8: திருவாரூர் மாவட்டம் கோட்டூர் ஒன்றியம் ரெங்கநாதபுரம் ஊராட்சியில சட்டமன்றத் தொகுதி உறுப்பினர் மேம்பாட்டு நிதியில் இருந்து ரூ.13.35 லட்சம் மதிப்பில் அங்கன்வாடிக்கு புதிய கட்டிடம் கட்டப்பட்டது. இந்நிலையில், புதிதாக கட்டப்பட்ட அங்கன்வாடி கட்டிடத்தை திருத்துறைப்பூண்டி எம்எல்ஏ மாரிமுத்து குத்துவிளக்கேற்றி மக்கள் பயன்பாட்டிற்கு திறந்து வைத்தார். நிகழ்ச்சியில், கோட்டூர் தெற்கு ஒன்றிய திமுக செயலாளர் தேவதாஸ், சிபிஐ ஒன்றிய செயலாளர் செந்தில்நாதன், ஒன்றிய குழு தலைவர் மணிமேகலை முருகேசன், மாவட்ட கவுன்சிலர் மஞ்சுளா, வட்டார வளர்ச்சி அலுவலர்கள், ஊராட்சி மன்ற தலைவர் ஜெயலட்சுமி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
The post ரெங்கநாதபுரத்தில் அங்கன்வாடிமையம் பயன்பாட்டு வந்தது appeared first on Dinakaran.