×

மதுராந்தகம் புறவழி சாலையில் டெம்போ வேன் மீது அரசு பேருந்து மோதி விபத்து: 4 பேர் காயம்

மதுராந்தகம்: மதுராந்தகம் புறவழி சாலையில் நேற்று காலை அரசு பேருந்து, டெம்போ வேன், சுற்றுலா பேருந்து ஒன்றன் பின் ஒன்றாக மோதி விபத்துக்குள்ளாகின. மதுராந்தகம் புறவழி திருச்சி-சென்னை தேசிய நெடுஞ்சாலையில் நேற்று காலை நாகர்கோவிலில் இருந்து சென்னை நோக்கி சென்று கொண்டிருந்த அரசு விரைவு பேருந்து முன்னால் சென்ற டெம்போ வேன் மீது மோதியது. இதைத்தொடர்ந்து, அந்த வேன் முன்னால் சென்று கொண்டிருந்த சுற்றுலா பேருந்தின் பின்பகுதியில் மோதியது. இந்த 3 வாகனங்கள் ஒன்றன் பின் ஒன்றாக மோதிக்கொண்ட விபத்தில் டெம்போ வேனில் பயணம் செய்தவர்களில் 4 பேர் காயம் அடைந்தனர்.

இந்த விபத்தால், திருச்சி-சென்னை தேசிய நெடுஞ்சாலையில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த மதுராந்தகம் போலீசார் காயம் அடைந்தவர்களை மீட்டு சிகிச்சைக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர், விபத்தில் சிக்கிய வாகனங்களை அப்புறப்படுத்தி போக்குவரத்து நெரிசலை சரி செய்தனர். மேலும், விபத்து குறித்து மதுராந்தகம் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

The post மதுராந்தகம் புறவழி சாலையில் டெம்போ வேன் மீது அரசு பேருந்து மோதி விபத்து: 4 பேர் காயம் appeared first on Dinakaran.

Tags : Madurathangam ,Madhurandakam ,Maduraandakam ,Madurandakam ,Dinakaran ,
× RELATED மதுராந்தகம் அரசு மருத்துவமனையில்...