×

இலங்கை விமானபடை விமானம் நொறுங்கி விழுந்து 2 பேர் பலி

கொழும்பு: இலங்கை விமான படையை சேர்ந்த விமானம் ஒன்று திரிகோணமலை விமான படை தளத்தில் இருந்து வழக்கமான பயிற்சிக்காக புறப்பட்டு சென்றது. புறப்பட்ட சிறிது நேரத்திலேயே விமானம் நொறுங்கி விழுந்து விபத்துக்குள்ளானது. இதில், விமான பைலட் மற்றும் ராணுவ வீரர் பலியாயினர்.

இலங்கை விமான படை தளபதி ஏர்மார்ஷல் உடேனி ராஜபக்சா கூறுகையில், ‘‘விபத்துக்குள்ளான விமானம் சீனாவில் தயாரிக்கப்பட்ட பிடி-6 ரக விமானம் ஆகும். காலை 11.25 மணிக்கு புறப்பட்ட விமானம் 11.27மணிக்கு விபத்துக்குள்ளாகியது. விபத்து குறித்து விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது’’ என்றார்.

The post இலங்கை விமானபடை விமானம் நொறுங்கி விழுந்து 2 பேர் பலி appeared first on Dinakaran.

Tags : Sri Lanka Air Force ,Colombo ,Sri Lankan Air Force ,Trikonamalai Air Force Base ,Sri ,Air Force ,Dinakaran ,
× RELATED யாழ்ப்பாணம் நீதிமன்றத்தால் தண்டனை...