×

கை அகற்றப்பட்ட குழந்தை உயிரிழப்பு; பெற்றோரின் குற்றச்சாட்டு மீது நடவடிக்கை: டிடிவி.தினகரன் வலியுறுத்தல்

சென்னை:அமமுக பொதுச் செயலாளர் டிடிவி.தினகரன், தனது டிவிட்டர் பதிவில் இன்று கூறியிருப்பதாவது: சென்னை எழும்பூர் அரசு மருத்துவமனையில் கை அகற்றப்பட்ட குழந்தை, சிகிச்சை பலனின்றி உயிரிழந்த செய்தி வேதனையளிக்கிறது.

மருத்துவர்களின் அலட்சியத்தால், மேல்சிகிச்சையின் போது குழந்தையின் கை அகற்றப்பட்டதாக குழந்தையின் பெற்றோர்கள் குற்றம்சாட்டியிருந்த நிலையில், இப்போது அந்த குழந்தை சிகிச்சை பலனின்றி உயிரிழந்திருக்கிறது. அந்த குழந்தையின் பெற்றோருக்கு இழப்பீடு வழங்க நடவடிக்கை எடுப்பதுடன், பெற்றோரின் குற்றச்சாட்டை உரிய விசாரணை நடத்தி காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.

The post கை அகற்றப்பட்ட குழந்தை உயிரிழப்பு; பெற்றோரின் குற்றச்சாட்டு மீது நடவடிக்கை: டிடிவி.தினகரன் வலியுறுத்தல் appeared first on Dinakaran.

Tags : DTV.Thinakaran ,CHENNAI ,AAM ,MUK ,General Secretary ,TTV ,Dinakaran ,Egmore Government Hospital ,DTV ,
× RELATED என்னை பச்சோந்தி என்ற எடப்பாடி பச்சை...