×

காஷ்மீர் எல்லையில் ஊடுருவ முயன்ற பயங்கரவாதிகள் 2 பேர் பாதுகாப்புப் படையினரால் சுட்டுக்கொலை.!

ஸ்ரீநகர் : ஜம்மு- காஷ்மீரின் பூஞ்ச் மாவட்டத்தில் 2 தீவிரவாதிகள் பாதுகாப்புப் படையினரால் சுட்டுக் கொலை செய்யப்பட்டனர். கடந்த சனிக்கிழமை காஷ்மீரின் குல்காம் மாவட்டத்தில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் ராணுவ வீரர்கள் 3 பேர் வீரமரணம் அடைந்தனர். இதைத் தொடர்ந்து தீவிரவாதிகளை தேடும் பணியில் இந்திய ராணுவம் மற்றும் ஜம்மு – காஷ்மீர் போலீசார் இணைந்து ஈடுபட்டனர். அச்சமயம் ஜம்மு- காஷ்மீர் மாநிலம் பூஞ்ச் மாவட்டத்தில் உள்ள தெக்வார் செக்டாரின் எல்லைக் கட்டுப்பாடு கோட் பகுதியில் தீவிரவாதிகள் நடமாட்டம் இருப்பதாக தகவல் அறிந்து, அங்கு ரோந்து பணியில் ஈடுபட்டனர்.

அப்போது பதுங்கி இருந்த தீவிரவாதிகள் பாதுகாப்புப் படையினர் மீது துப்பாக்கிச் சூடு நடத்த, பதிலுக்கு பாதுகாப்புப் படை வீரர்களும் தாக்கினர். இதில் எல்லை தாண்ட முயன்ற 2 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர். கொல்லப்பட்ட தீவிரவாதிகளிடம் இருந்து துப்பாக்கிகள், ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. சுதந்திர தினத்தை முன்னிட்டு ஜம்மு- காஷ்மீரில் மிகப்பெரிய தீவிரவாத தாக்குதலை நடத்த பாகிஸ்தானை சேர்ந்த தீவிரவாத குழுக்கள் திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.கட்டுப்பாடு மற்றும் சர்வதேச எல்லையில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.ஜம்மு காஷ்மீர் எல்லையில் கடந்த 24 மணி நேரத்தில் நடந்த இரண்டாவது ஊடுருவல் முயற்சி முறியடிக்கப்பட்டுள்ளது.

The post காஷ்மீர் எல்லையில் ஊடுருவ முயன்ற பயங்கரவாதிகள் 2 பேர் பாதுகாப்புப் படையினரால் சுட்டுக்கொலை.! appeared first on Dinakaran.

Tags : Kashmir border ,Srinagar ,Punch district ,Jammu and ,Kashmir ,Dinakaran ,
× RELATED மின்னணு வாக்கு பதிவு கருவி திருட்டு...