×

குஜிலியம்பாறை ஒன்றிய திமுக சார்பில் பாகநிலை முகவர்கள் ஆலோசனை கூட்டம்: ஒன்றிய சேர்மன் தலைமையில் நடந்தது

 

குஜிலியம்பாறை, ஆக. 7: குஜிலியம்பாறையில் ஒன்றிய திமுக சார்பில், வாக்குச் சாவடி பாகநிலை முகவர்களுக்கான ஆலோசனை கூட்டம் நேற்று நடந்தது. கூட்டத்திற்கு குஜிலியம்பாறை ஒன்றிய சேர்மன் சீனிவாசன் தலைமை வகித்தார். ஒன்றிய அவைத் தலைவர் சம்பத், மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் இராஜ்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் இன்று ஆக.7ந் தேதி மறைந்த திமுக தலைவர் கலைஞர் 5ம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு, குஜிலியம்பாறை ஒன்றிய திமுக சார்பில் 17 கிராம ஊராட்சிகளிலும் கலைஞரின் திருவுருவ படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்துவது, தென் மண்டலத்திற்குட்பட்ட மாவட்டங்களின் வாக்குச்சாவடி பாகநிலை முகவர்கள் (பிஎல்ஏ2) பாசறை கூட்டம் வருகிற 17ந் தேதி இராமநாதபுரம் மாவட்டம், தேவிப்பட்டினம் சாலை, பேராவூர் என்ற இடத்தில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடக்கிறது.

இதில் அமைச்சர்கள் ஐ.பெரியசாமி, அர.சக்கரபாணி ஆகியோரின் வழிகாட்டுதலின்படி, குஜிலியம்பாறை ஒன்றியத்திற்குட்பட்ட வாக்குச்சாவடி நிலை முகவர்கள் கலந்து கொள்வது குறித்தும், நடைபெறவுள்ள பயிற்சி பாசறை கூட்டத்தின் அவசியம் குறித்தும் எடுத்துரைக்கப்பட்டு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. கூட்டத்தில் குஜிலியம்பாறை ஒன்றியத்திற்குட்பட்ட 71 வாக்குச்சாவடி பாகநிலை முகவர்கள் கலந்து கொண்டனர். இதில் திமுக நிர்வாகிகள் மாரிமுத்து, பொன்சுப்பிரமணி, கருப்பசாமி, இளங்கோவன், சுமதி, ராஜமாணிக்கம், ராஜா, மோகன்ராஜ், பிரகாஷ், சசி, கார்த்தி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

The post குஜிலியம்பாறை ஒன்றிய திமுக சார்பில் பாகநிலை முகவர்கள் ஆலோசனை கூட்டம்: ஒன்றிய சேர்மன் தலைமையில் நடந்தது appeared first on Dinakaran.

Tags : Kujiliampara Union DMK ,Kujiliamparai ,Union DMK ,Dinakaran ,
× RELATED திமுக சார்பில் நீர்மோர் பந்தல் திறப்பு