ஈரோடு, ஆக.7: ஈரோடு அடுத்த சூரியம்பாளையம் துணை மின் நிலையத்தில் இருந்து செல்லும் ஐஆர்டிடி மின் பாதையிலும், கவுந்தப்பாடி துணை மின் நிலையத்திலிருந்து செல்லும் ஓடத்துறை மின் பாதையிலும் மற்றும் தளவாய்பேட்டை துணை மின் நிலையத்திலும் பராமரிப்பு பணிகள் நாளை (8ம் தேதி) மேற்கொள்ளப்பட உள்ளது. இதனால், பூலப்பாளையம், பெரியபுலியூர், வளையக்காரபாளையம், மூவேந்தர் நகர், மாரப்பம்பாளையம், சேவாக்கவுண்டணூர், கிரேஸ் நகர், ராஜீவ்காந்தி நகர், ஆவரங்காட்டூர், அய்யம்பாளையம், சூரியம்பாளையம், பாலப்பாளையம், ஓடத்துறை, ஆண்டிபாளையம், செல்லக்குமாரபாளையம், வைரமங்கலம், சிறை மீட்டான்பாளையம், குண்டுசெட்டிபாளையம், சி.மேட்டூர், வெங்கமேடு, சூளைமேடு, கவுண்டம்புதூர், குட்டிபாளையம் ஆகிய பகுதிகளில் நாளை (8ம் தேதி) காலை 10 மணி முதல் மாலை 3 மணி வரை மின் விநியோகம் இருக்காது என ஈரோடு நகரியம் மின் விநியோக செயற்பொறியாளர் சாந்தி தெரிவித்துள்ளார்.
The post ஈரோடு புறநகர் பகுதியில் நாளை மின் தடை appeared first on Dinakaran.