×

மாநகராட்சி மேயர் ஆய்வு நினைவு நாளையொட்டி கலைஞர் திருவுருவப் படத்திற்கு மலர்தூவி மரியாதை செலுத்த வண்டும் திமுக வடக்கு மாவட்ட செயலாளர் அறிக்கை

திருப்பூர், ஆக.6: திமுக., வடக்கு மாவட்ட செயலாளரும், திருப்பூர் தெற்கு ெதாகுதி எம்.எல்.ஏ.,வுமான செல்வராஜ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:
நாளை(7ம்தேதி) முத்தமிழறிஞர் டாக்டர் கலைஞரின் 5-ம் ஆண்டு நினைவு நாளையொட்டி வடக்கு மாவட்டம் முழுவதும் உள்ள அனைத்து வார்டுகளிலும், கிளைக் கழகங்களிலும் கலைஞரின் திருவுவுறுவப் படம் வைத்து, மலர் தூவி மரியாதை செலுத்திட வேண்டும். அதனைத் தொடர்ந்து, அன்று காலை 8 மணியளவில் திருப்பூர் ரயில் நிலையம் அருகில் உள்ள அண்ணா-பெரியார் சிலை முன்பு அமைக்கப்பட உள்ள கலைஞரின் திருவுருவப் படத்திற்கு மாலை அணிவித்து மலர்தூவி மரியாதை செலுத்தும் நிகழ்ச்சி எனது தலைமையிலும், மாநகர செயலாளர்கள் டி.கே.டி.மு.நாகராசன், மேயர் தினேஷ்குமார் ஆகியோர் முன்னிலையிலும் நடைபெற உள்ளது.

அது சமயம் மாவட்ட, மாநகர, ஒன்றிய, நகர, பகுதி, பேரூர், வட்ட, கிளைக் கழக நிர்வாகிகள், அணி பொறுப்புகளின் அமைப்பாளர்கள், துணை அமைப்பாளர்கள், எல்.பி.எப். நிர்வாகிகள்,முன்னாள்,இந்நாள் உள்ளாட்சி பிரதிநிதிகள், கட்சியினர் அனைவரும் தவறாமல் கலந்து கொள்ள வேண்டுமாய் கேட்டுக்கொள்ளப்படுகிறது. இவ்வாறு அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

The post மாநகராட்சி மேயர் ஆய்வு நினைவு நாளையொட்டி கலைஞர் திருவுருவப் படத்திற்கு மலர்தூவி மரியாதை செலுத்த வண்டும் திமுக வடக்கு மாவட்ட செயலாளர் அறிக்கை appeared first on Dinakaran.

Tags : Northern District ,Dizhagam ,Malarduvi ,Thiruvuruva ,Mayor ,of the Corporation ,Tiruppur, Ag. 6 ,Thisuga. ,Tiruppur South Schedakudi M.M. ,Vumana Selvaraj ,PA ,Dizaghagam ,Governor's Study Memorial Day of the Corporation ,Dinakaran ,
× RELATED வடக்கு மாவட்ட வழக்கறிஞரணி ஆலோசனை...