×

நெல்லை கிழக்கு, மத்திய மாவட்ட திமுக செயல்வீரர்கள் கூட்டம் மக்களவை தேர்தலில் 40 தொகுதிகளிலும் வெற்றி பெறுவதே குறிக்கோள்

நெல்லை, ஆக. 6: மக்களவைத்தேர்தலில் தமிழகம், புதுவையில் 40 தொகுதிகளிலும் வெற்றி பெறுவதே குறிக்கோள் என நெல்லையில் நடந்த கிழக்கு, மத்திய மாவட்ட திமுக செயல்வீரர்கள் கூட்டத்தில் அமைச்சர் தங்கம் தென்னரசு பேசினார். நெல்லை கிழக்கு, மத்திய மாவட்ட திமுக செயல்வீரர்கள் கூட்டம், வண்ணார்பேட்டை அப்னா பார்க் ஓட்டலில் நடந்தது. நெல்லை மாவட்ட அவைத்தலைவர்கள் கிரகாம்பெல், வி.கே.முருகன் ஆகியோர் தலைமை வகித்தனர். ஞானதிரவியம் எம்பி, அப்துல்வகாப் எம்எல்ஏ, மேயர் பி.எம்.சரவணன், துணை மேயர் கேஆர் ராஜூ ஆகியோர் முன்னிலை வகித்தனர். கிழக்கு மாவட்ட திமுக செயலாளர் ஆவுடையப்பன், மத்திய மாவட்ட திமுக பொறுப்பாளர் டிபிஎம் மைதீன்கான் ஆகியோர் பேசினர். நெல்லை மாநகர செயலாளர் சுப்பிரமணியன் தீர்மானங்களை வாசித்தார்.

கூட்டத்தில் நெல்லை மாவட்ட பொறுப்பு அமைச்சர் தங்கம் தென்னரசு பேசியதாவது: தமிழ்நாட்டில் மொத்தம் 39 தொகுதிகள் இருக்கின்றன. எனினும் அரசியல் அரங்கில் அனைவராலும் உன்னிப்பாக கவனிக்கக் கூடிய தொகுதி நெல்லை. நெல்லை மக்களின் எண்ணம் எப்படி பிரதிபலிக்கிறது, உணர்வு எப்படி இருக்கிறது, என்பதுதான் தென் மாவட்டங்களில் 15 தொகுதிகளில் எதிரொலிக்கும். தமிழ்நாடு முழுவதும் 40 தொகுதிகளிலும் வெற்றி பெறுவது தான் குறிக்கோள். இந்த 40 தொகுதிகளில் நெல்லை தொகுதியில் அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற வேண்டும். இவ்வாறு அமைச்சர் தங்கம் தென்னரசு பேசினார்.

கூட்டத்தில் மகளிருக்கு கட்டணமில்லா பேருந்து பயணம், புதுமைப்பெண் திட்டம், கலைஞர் மகளிர் உரிமைத் தொகை உள்ளிட்ட திட்டங்களை தந்து தமிழகத்தை நம்பர் 1 மாநிலமாக மாற்றி கொண்டிருக்கும் தமிழ்நாடு முதல்வருக்கு நன்றியும், பாராட்டும் தெரிவிப்பது, அமைச்சர் தங்கம் தென்னரசை நெல்லை மாவட்ட பொறுப்பு அமைச்சராக நியமித்த முதல்வருக்கு நன்றி தெரிவிப்பது, மக்களவை தேர்தலில் 40 ெதாகுதிகளிலும் வெற்றி பெற முதல்வர் வருகிற 17ம் தேதி ராமநாதபுரம் மாவட்டத்தில் நடத்தும் பாக முகவர்கள் கூட்டத்தில் அனைவரும் தவறாது கலந்து கொள்வது, கலைஞரின் 5ம் ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு வருகிற 7ம் தேதி புகழஞ்சலி செலுத்துவது என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

கூட்டத்தில் மாவட்ட பஞ். தலைவர் விஎஸ்ஆர் ெஜகதீஸ், முன்னாள் எம்எல்ஏக்கள் மாலைராஜா, ஏஎல்எஸ் லெட்சுமணன், மாநில நெசவாளரணி செயலாளர் பெருமாள், தலைமை செயற்குழு உறுப்பினர்கள் பிரபாகரன், பேச்சிபாண்டியன், சித்திக், முன்னாள் மாவட்ட அவைத்தலைவர் சுப சீதாராமன், மாநில மகளிர் தொண்டரணி துணை செயலாளர் விஜிலா சத்யானந்த், பாளை. ஒன்றிய திமுக செயலாளரும், ஊராட்சி ஒன்றிய தலைவருமான கேஎஸ் தங்கபாண்டியன், பொதுக்குழு உறுப்பினர்கள் பரமசிவ ஐயப்பன், வேலன்குளம் கண்ணன், மாவட்ட துணை செயலாளர்கள் எஸ்வி சுரேஷ், தர்மன், கிரிஜாகுமார், பகுதி செயலாளர்கள் தச்சை சுப்பிரமணியன், கோபி என்ற நமச்சிவாயம், அண்டன் செல்லத்துரை, துபாய் சாகுல், மாவட்ட முன்னாள் பொருளாளர் அருண்குமார், நெல்லை மண்டல தலைவர் மகேஸ்வரி, கல்லிடைக்குறிச்சி பேரூராட்சி துணை தலைவர் இசக்கி பாண்டியன், மாவட்ட இளைஞரணி அமைப்பாளர்கள் வில்சன் மணித்துரை, ஜான் ரபீந்தர், மாநகரம் கருப்பசாமி கோட்டையப்பன், மாநில விவசாய தொழிலாளர் அணி துணை செயலாளர் கணேஷ்குமார் ஆதித்தன், மாவட்ட விவசாய அணி அமைப்பாளர் பொன்னையா பாண்டியன், மகளிர் தொண்டரணி அமைப்பாளர் அனிதா, ஒன்றிய திமுக செயலாளர்கள் பாளை. மத்தி போர்வெல் கணேசன் மானூர் அன்பழகன், அருள்மணி, பாளை. வடக்கு வேலன்குளம் முருகன், வக்கீல் அணி துணை அமைப்பாளர் செல்வசூடாமணி, மத்திய மாவட்ட விளையாட்டு மேம்பாட்டு அணி துணை அமைப்பாளர் வீரபாண்டியன்,மாநில மீனவரணி துணை செயலாளர் ஜூட், மேலபுத்தனேரி பஞ்., தலைவரும், நெல்லை கிழக்கு மாவட்ட திமுக இளைஞரணி துணை அமைப்பாளருமான கேஎம்கே மனோஜ்குமார், இளைஞரணி ஆனந்த், மாநகர துணை செயலாளர் மூளிகுளம் பிரபு பாண்டியன், தகவல் தொழில்நுட்ப அணி மாவட்ட துணை ஒருங்கிணைப்பாளர் காசிமணி, பொதுக்குழு உறுப்பினர் நடராஜன், விவசாய அணி கால்வாய் துரை பாண்டியன், தச்சநல்லூர் பகுதி பொருளாளர் அய்யாசாமி பாண்டியன், பொறியாளர் அணி சாய் பாபா உள்ளிட்ட திமுகவினர் கலந்து கொண்டனர்.

The post நெல்லை கிழக்கு, மத்திய மாவட்ட திமுக செயல்வீரர்கள் கூட்டம் மக்களவை தேர்தலில் 40 தொகுதிகளிலும் வெற்றி பெறுவதே குறிக்கோள் appeared first on Dinakaran.

Tags : Nollam East ,Central District ,Kazhagam ,Paddy ,Tamil Nadu ,Buddhu ,East of Nelli ,East ,Central District Gangal Activists Meeting ,
× RELATED சமூகநீதி குளவிக்கூட்டில் கை வைக்க வேண்டாம்: கி.வீரமணி