×

பிஎஸ்என்எல் ஊழியர் சங்க மாநாடு

 

விருதுநகர், ஆக.5: விருதுநகர் மாவட்ட பி.எஸ்.என்.எல். ஊழியர் சங்க 11வது மாவட்ட மாநாடு பி.எஸ்.என்.எல். அலுவலக கூட்டமன்ற அரங்கில் நடைபெற்றது. மாவட்டத் தலைவர் கனகராஜ் தலைமை வகித்தார். மாவட்டச் செயலாளர் குருசாமி வரவேற்றார். மாநிலச் செயலாளர் ராஜூ துவக்கி வைத்து பேசினார். ரிச்சர்ட், சம்பத்குமார், குமுதவள்ளி, புளுகாண்டி, பார்த்தசாரதி, அஷ்ரப்தீன் வாழ்த்துரை வழங்கினர். உதவிச் செயலர் ஜெயக்குமார் நன்றியுரை வழங்கினார். இதில் புதிய நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டனர்.

புதிய மாவட்டத் தலைவராக இளமாறன், மாவட்ட செயலாளராக ஜெயக்குமார், மாவட்ட பொருளாளராக ராதாகிருஷ்ணன் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர். இம்மாநாட்டில், 4ஜி, 5ஜி இணைப்புகள் பி.எஸ்.என்.எல் நிறுவனத்துக்கு வழங்கிட வேண்டும், நிறுவனத்தை புத்தாக்கம் செய்வதை உறுதிப்படுத்த வேண்டும், இதில் பணிபுரியும் ஊழியர்களுக்கு ஊதிய மாற்றம் உடனே வழங்க வேண்டும், புதிய பதவி உயர்வு கொள்கையை உடனே அமல்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

The post பிஎஸ்என்எல் ஊழியர் சங்க மாநாடு appeared first on Dinakaran.

Tags : BSNL Employees Union Conference ,Virudhunagar ,Virudhunagar district ,BSNL ,Union ,11th District Convention ,Dinakaran ,
× RELATED கோயில் திருவிழாவுக்கு பேனர் வைக்கும்...