×

நீலகிரியில் அரசு பஸ்களின் எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டும் குன்னூர் நுகர்வோர் சங்கம் வலியுறுத்தல்

 

ஊட்டி,ஆக.5: நீலகிரி மாவட்டத்தில் அரசு பஸ்களின் எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டும் என குன்னூர் நுகர்வோர் சங்கம் வலியுறுத்தி உள்ளது. குன்னூர் நுகர்வோர் பாதுகாப்பு சங்கத்தின் மாதாந்திர கூட்டம் சங்க தலைவர் மனோகரன் தலைமையில் நடந்தது. துணைதலைவர் சுப்பிரமணியன் வரவேற்றார். செயலாளர் ஆல்துரை அறிக்கை வாசித்தார். இதில் நடப்பு கல்வி ஆண்டில் மாணவர் சேர்க்கை நடந்து முடிந்த நிலையில் பள்ளி, கல்லூரி செல்வோர் பஸ்களில் அடைத்துக் கொண்டு செல்வதையும், பஸ்சுக்காக காத்திருப்பதையும் காண முடிகிறது. மேலும் எஸ்டேட் பகுதிகளுக்கு செல்லும் மாணவர்கள் மாலை நேரத்தில் வனப்பகுதிகளில் அச்சத்துடன் செல்கின்றனர். எனவே பஸ்களின் எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டும்.

தனியார் பள்ளிகளில் நோட்டுப் புத்தகங்கள் மற்றும் எழுது பொருள்கள் விற்பனை செய்வதுடன் அங்கேயே வாங்க வேண்டும் என்று கட்டாயப்படுத்தப்படுவதால் பெற்றோர் அதிருப்தி அடைந்துள்ளனர். எனவே சரியான விலையில் விற்கப்படுகிறதா, உரிய பில் வழங்கப்படுகிறதா, விற்பனை உரிமம் பெற்று வரி செலுத்தப்படுகிறதா என்பது குறித்து வணிக வரித்துறை, நுகர்வோர் பாதுகாப்புத்துறை, கல்வித் துறை ஆகியவை ஆய்வு மேற்கொண்டு முறைப்படுத்தப்படவேண்டும். கிராமப்புறங்களில் உள்ள தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கங்களில் கடன் பெறும் விவசாயிகளிடம் வாங்கப்படும் பங்குத்தொகையை கடன் முடிந்த உடன் திருப்பி தராமல் முறைகேடுகள் நடப்பதாக விவசாயிகள் புலம்புகின்றனர்.
எனவே இது குறித்து கூட்டுறவுத்துறை வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும் என்பன போன்ற தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. முடிவில் இணைச் செயலாளர் தர்மசீலன் நன்றி கூறினார்.

The post நீலகிரியில் அரசு பஸ்களின் எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டும் குன்னூர் நுகர்வோர் சங்கம் வலியுறுத்தல் appeared first on Dinakaran.

Tags : Coonoor Consumers' Association ,Nilgiris ,Dinakaran ,
× RELATED கொடைக்கானலில் இ-பாஸ் நடைமுறைக்கு...