மதுரை, ஆக. 5:மதுரை பழங்காநத்தம் பகுதியை சேர்ந்த முனியசாமி மனைவி சத்யாபாமா (50). இவர் நேற்று முன்தினம் காலையில் வீட்டை பூட்டி விட்டு வெளியே சென்றார். பின்னர் மாலையில் வீடு திரும்பினார். அப்போது பின்பக்கம் உள்ள சமையல் அறையில் பூட்டு உடைக்கப்பட்டு கதவு திறந்திருந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தார். உள்ளே சென்று பார்த்த போது, அங்கு பொருட்கள் சிதறி கிடந்தன. பீரோவை பார்த்த போது, அதில் இருந்த 21 பவுன் தங்க நகைகள் கொள்ளை போனது தெரியவந்தது. இதுகுறித்து சத்யாபாமா அளித்த புகாரில் சுப்பரமணியபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
The post மதுரையில் வீட்டின் பூட்டை உடைத்து 21 பவுன் கொள்ளை appeared first on Dinakaran.