×

ஓய்வு போலீஸ்காரர் டூவீலர் திருட்டு

தர்மபுரி, ஆக.5: அரூர் வேலம்பட்டியைச் சேர்ந்தவர் சதாசிவம்(74). போலீசாக பணியாற்றி ஓய்வு பெற்றவர். இந்நிலையில், சதாசிவம் அரிசி மாவு அரைப்பதற்காக கடைக்கு சென்றுள்ளார். அப்போது கடையில் கூட்டம் அதிகமாக இருந்ததால், அதற்குள் நடைபயிற்சியை முடித்து விட்டு வந்து விடலாம் என, அருகில் உள்ள விளையாட்டு மைதானம் முன்பாக தனது டூவீலரை நிறுத்தி விட்டு நடைபயிற்சிக்கு சென்றுள்ளார். திரும்பி வந்து பார்த்த போது. டூவீலர் திருடு போயிருந்தது. இதுகுறித்து சதாசிவம் அளித்த புகாரின் பேரில் அரூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

The post ஓய்வு போலீஸ்காரர் டூவீலர் திருட்டு appeared first on Dinakaran.

Tags : Dharmapuri ,Sathasivam ,Arur Velampatti ,Dinakaran ,
× RELATED வாகன புகை பரிசோதனை மையங்கள் புதிய செயலியை நிறுவ வேண்டும்