×

லாரி ஓட்டுனரிடம் பணம் திருடியவர் கைது

செங்கல்பட்டு:செங்கல்பட்டு மாவட்டம், மறைமலைநகர் அடுத்த நின்னகாட்டூர் பகுதியை சேர்ந்தவர் ராமு (30). இவர் மறைமலைநகர் மற்றும் அதன் சுற்று வட்டார பகுதியில் கழிவுநீர் லாரி ஓட்டி வருகின்றார். இந்நிலையில், மறைமலைநகர் ரயில் நிலையம் அருகே சாலை ஓரமாக தனது லாரியை நிறுத்திவிட்டு, தேனீர் குடித்தார். பின்னர், திரும்பி வந்து பார்த்தார். அப்போது, லாரியில் வைத்திருந்த ஆயிரம் ரூபாய் திருடு போனது தெரியவந்தது. இதனை தொடர்ந்து மறைமலைநகர் காவல் நிலையத்தில் ராமு நேற்று முன்தினம் புகார் கொடுத்தார்.

அதன்பேரில், போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்தனர். அதில், லாரியில் இருந்து பணத்தை திருடியவர் கூடுவாஞ்சேரி அடுத்த தைலாவரத்தை சேர்ந்த ஹரிகுமார் (43) என்பது தெரிய வந்தது. இதையடுத்து, அவரை கைது செய்த போலீசார் நேற்று செங்கல்பட்டு நீதிமன்றத்தில் அவரை ஆஜர்படுத்தினர். பின்னர், அவர் ஜாமீனில் விடுவிக்கப்பட்டார். ஹரிகுமார் ஏற்கனவே 35 வழக்குகளில் கைதானவர் என்பதும், இவர் குரோம்பேட்டை, ஓட்டேரி, கூடுவாஞ்சேரி, மறைமலைநகர் ஆகிய காவல் நிலையங்களில் திருட்டு மற்றும் வழிப்பறி வழக்குகளில் தொடர்புடையவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

The post லாரி ஓட்டுனரிடம் பணம் திருடியவர் கைது appeared first on Dinakaran.

Tags : Chengalpattu ,Ramu ,Ninnagatur ,Chiramalainagar ,Chengalpattu district ,Kiramalai Nagar ,Dinakaran ,
× RELATED நடிகை யாஷிகா ஆனந்தின் கார் விபத்து வழக்கு மாற்றம்..!!