×

நண்பனின் மனைவி என்றும் பாராமல் குளிர்பானத்தில் மயக்க மருந்து கலந்து கொடுத்து இளம்பெண் பலாத்காரம்: வாலிபர் கைது

திருமலை: பப்ஜி கேமில் அறிமுகமான இளம்பெண்ணிற்கு குளிர்பானத்தில் மயக்க மருந்து கலந்து கொடுத்து பாலியல் பலாத்காரம் செய்த வாலிபரை போலீசார் இன்று கைது செய்தனர். ஆந்திர மாநிலம், கோனா சீமா மாவட்டத்தைச் சேர்ந்தவர் 21 வயது இளம்பெண். பி.நாயக்கம்பள்ளி கிராமத்தைச் சேர்ந்தவர் ஜோசுவா (26), அரசின் கிராம தன்னார்வலர். அங்காரா கிராமத்தைச் சேர்ந்தவர் நரசிம்மமூர்த்தி (25). இவர்கள் 3பேருக்கும் ஆன்லைன் பப்ஜி விளையாட்டு மூலம் பழக்கம் ஏற்பட்டு நண்பர்களானார்கள். தொடர்ந்து பப்ஜி விளையாட்டில் ஈடுபட்ட நிலையில் ஜோசுவாவுக்கும் இளம்பெண்ணுக்கும் இடையே காதல் ஏற்பட்டுள்ளது.

இதையடுத்து அவர்கள் இருவரும் கடந்த 2020ம் ஆண்டு ஜூன் 10ம்தேதி திருமணம் செய்து கொண்டனர். ஆனால் நரசிம்மமூர்த்தி அந்த பெண்ணை ஒருதலையாக காதலித்துள்ளார். அந்த பெண்ணும் ஜோசுவாவும் திருமணம் செய்து கொண்டதால் கடும் வேதனை அடைந்தார். இந்நிலையில் இளம்பெண் ஐதராபாத் பால்கம்பேட்டில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் வேலையில் சேர்ந்தார். அவர் வேலைக்கு செல்லும்போது தினமும் அவரை ரகசியமாக பின்தொடர்ந்துள்ளார். ஒருநாள் அவரை சந்தித்த நரசிம்மமூர்த்தி, அந்த பெண்ணிடம் பாசமாக பேசியுள்ளார். அப்போது தனது அறைக்கு வருமாறு கூறியுள்ளார்.

இதை ஏற்ற அந்த பெண், ஐதராபாத் மல்லன்னகுட்டா, ஜவஹர் நகரில் உள்ள நரசிம்மமூர்த்தி அறைக்கு நேற்று சென்றுள்ளார். அப்போது நரசிம்மமூர்த்தி தான் ஏற்கனவே தயாராக ைவத்திருந்த மயக்க மருந்து கலந்த குளிர்பானத்தை கொடுத்துள்ளார். இதை குடித்த சிறிது நேரத்தில் இளம்பெண் மயங்கி விழுந்தார். இதை பயன்படுத்திக்கொண்ட நரசிம்மமூர்த்தி இளம் பெண்ணை நிர்வாணமாக்கி போட்டோ, வீடியோ எடுத்துள்ளார். மேலும் அவரை பாலியல் பலாத்காரம் செய்துவிட்டு தப்பி ஓடிவிட்டார். சிறிது நேரம் கழித்து மயக்கம் தெளிந்த இளம்பெண் நடந்த சம்பவத்தை அறிந்து கதறி அழுதுள்ளார்.

பின்னர் வீடு திரும்பிய இளம்பெண், தற்கொலைக்கு முயன்றுள்ளார். இதைபார்த்த உறவினர்கள் மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு சிகிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்து இளம்பெண்ணின் உறவினர்கள், ஐதராபாத் மதுரா நகர் போலீசில் புகார் அளித்தனர். அதன்பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து தலைமறைவான நரசிம்மமூர்த்தியை தேடி வந்தனர். அவர் தனது சொந்த ஊரில் பதுங்கியிருப்பதாக போலீசாருக்கு இன்று தகவல் கிடைத்தது. இதையடுத்து அங்கு சென்ற போலீசார், நரசிம்மமூர்த்தியை ைகது செய்து விசாரித்து வருகின்றனர்.

The post நண்பனின் மனைவி என்றும் பாராமல் குளிர்பானத்தில் மயக்க மருந்து கலந்து கொடுத்து இளம்பெண் பலாத்காரம்: வாலிபர் கைது appeared first on Dinakaran.

Tags : Waliber ,Tirumalai ,
× RELATED விசாகப்பட்டினத்தில் பரபரப்பு...