×

பழனியில் தனியார் நகைக்கடையில் தங்க முலாம் பூசப்பட்ட முருகர் சிலை: 4 அடி உயரம், 250 கிலோ எடை சிலையில் 24 கேரட் தங்க முலாம் பூச்சு

பழனி: பழனியில் தனியார் நகைக்கடை ஒன்றில் பொதுமக்கள் பார்வைக்காக வைக்கப்பட்டுள்ள தங்க முலாம் பூசப்பட்ட முருகர் சிலையை ஏராளமானோர் பார்வையிட்டு வருகின்றனர். பழனி ரயில் நிலைய சாலையில் உள்ள தனியார் நகைக்கடையில் தங்க மூலம் பூசப்பட்ட 4அடி உயரம் கொண்ட முருகன் சிலை பொதுமக்கள் பார்வைக்காக வைக்கப்பட்டுள்ளது.

சிலை திறப்பு நிகழ்ச்சியில் பங்கேற்ற பிரபல எழுத்தாளர் இந்திரா சவுந்தர்ராஜன் தங்க முலாம் பூசப்பட்ட முருகர் சிலையை திறந்து வைத்தார். பழனியில் நகை கடைகிளை தொடங்கப்பட்டு ஓராண்டு நிறைவுற்றதை கொண்டாடும் வகையில் முருகர் சிலை வைக்கப்பட்டதாக நிறுவனத்தின் சார்பில் தெரிவிக்கப்பட்டது. 24கேரட் தங்கமுலாம் பூசப்பட்ட 4 அடி உயரமும் 250கிலோ எடையும் கொண்ட சிலையின் மதிப்பு சுமார் ரூ.30 லட்சம் இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. தங்கத்தில் மின்னும் முருகர் சிலையை பொதுமக்கள் ஆர்வத்துடன் கண்டு செல்கின்றனர்.

The post பழனியில் தனியார் நகைக்கடையில் தங்க முலாம் பூசப்பட்ட முருகர் சிலை: 4 அடி உயரம், 250 கிலோ எடை சிலையில் 24 கேரட் தங்க முலாம் பூச்சு appeared first on Dinakaran.

Tags : Murugar ,Palani ,
× RELATED அக்கவுண்டை முடக்கியதால் ஆத்திரம்...