×

மஹாராஷ்டிரா மாநிலம் தானேவில் உள்ள கல்லூரியில் என்.சி.சி மாணவர்களை சீனியர் மாணவர் சரமாரியாக தாக்கும் காட்சி வெளியீடு..!!

மஹாராஷ்டிரா: மஹாராஷ்டிரா மாநிலம் தானேவில் உள்ள கல்லூரியில் என்.சி.சி மாணவர்களை சீனியர் மாணவர் ஒருவர் சரமாரியாக தாக்கும் காட்சி வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஜோஷி பெடேகர் வணிகவியல் கல்லூரி வளாகத்தில் மாணவர்களுக்கு என்.சி.சி பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது. அப்போது கொட்டும் மழையில் மாணவர்களை சேற்றில் குப்புற படுக்கவைத்து சீனியர் என்.சி.சி மாணவர் ஒருவர் சரமாரியாக தாக்கியுள்ளார்.

அதில் சில மாணவர்கள் வலிதாங்க முடியாமல் அழுவதும், கெஞ்சுவதும் மனதை பதைபதைக்க வைத்தது. மனிதாபிமானமற்ற இந்த செயலுக்கு பல்வேறு தரப்பினரும் தங்களது கண்டனத்தை தெரிவித்து வருகின்றனர். தாக்குதல் நடத்திய சீனியர் என்.சி.சி மாணவர் மீது கடும் நடவடிக்கை எடுக்கவேண்டும் என வலியுறுத்தியுள்ளனர். இந்நிலையில் தாக்குதல் நடத்தியவர் மீது ஒழுங்கு நடவடிக்கை மற்றும் சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக கல்லூரியின் முதல்வர் சுசித்ரா நாயக் தெரிவித்துள்ளார்.

 

The post மஹாராஷ்டிரா மாநிலம் தானேவில் உள்ள கல்லூரியில் என்.சி.சி மாணவர்களை சீனியர் மாணவர் சரமாரியாக தாக்கும் காட்சி வெளியீடு..!! appeared first on Dinakaran.

Tags : Thane ,Maharashtra State ,Suramariya ,Maharashtra ,Maharashtra State N. RC ,Chamariya ,
× RELATED ரயிலில் பறித்த செல்போனை மீட்க முயன்ற...