×

இன்ஜினியரை தாக்கி செல்போன் பறிக்க முயற்சி

 

கோவை, ஆக. 4: கோவை ஆவாரம்பாளையம் பகுதியை சேர்ந்தவர் விக்னேஷ் (30). இன்ஜினியரான இவர், நேற்று முன்தினம் தனது இருசக்கர வாகனத்தில் வீட்டின் அருகே சென்று கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக வந்த மர்ம நபர்கள் 2 பேர் அவரை வழிமறித்து, செல்போன் கேட்டுள்ளனர். விக்னேஷ் தர மறுத்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த இருவரும் அவரை சரமாரி தாக்கிவிட்டு அங்கிருந்து தப்பிச் சென்றனர். காயமடைந்த விக்னேஷ், அருகில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இதுதொடர்பாக அளிக்கப்பட்ட புகாரின்பேரில் பீளமேடு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

The post இன்ஜினியரை தாக்கி செல்போன் பறிக்க முயற்சி appeared first on Dinakaran.

Tags : Coimbatore ,Vignesh ,Avarampalayam ,
× RELATED கோவை வனத்துறை அதிகாரிகள் அலட்சியம்:...